இடுகைகள்

உமகக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீளா அடிமை உமக்கே ஆள் | Meela Adimai Lyrics in Tamil

படம்
[ad_1] திருப்பாட்டு 7 -ஆம் திருமுறை [பன்னிரு திருமுறை] சுந்தரர் தேவாரம் நாடு: சோழநாடு காவிரித் தென்கரைதலம்: ஆரூர்பண்: செந்துருத்தி Meela Adimai Lyrics in Tamil மீளா அடிமை உமக்கே ஆள் மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே! [ 1] விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே! [ 2] அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாதுகுன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே! [ 3] துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே...