இடுகைகள்

கரயம லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - தட்சன்ய புண்ணிய காலம் என்று கூறக்கூடிய காலமானது ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் தான் அதிக அளவில் தெய்வ வழிபாடு இருக்கும். ஆடி மாதத்தில் அம்மனின் வழிபாடும், பிறகு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம், மார்கழி மாதம் என்று நாம் பல வழிபாடுகளை மேற்கொள்வோம். அந்த அளவிற்கு வழிபாட்டிற்கு உகந்த காலமான இந்த காலத்தின் தொடக்க மாதம் என்பது ஆடி மாதமாக திகழ்கிறது. அதனால் இந்த ஆடி மாதத்தில் நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதற்குரிய பலன் நமக்கு அதிகமாகவே கிடைக்கும். அந்த வகையில் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக நாம் வழிபாடு செய்யும்பொழுது கிடைக்கும் பலனைவிட மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன் என்பது அதிகம். அதிலும் குறிப்பாக ஜபம் செய்வது என்பது மிகவும் உத்தமமான செயலாக திகழ்கிறது. மந்திரத்தையும் தெய்வத்தின் பெயரையும் ஜபம் செய்து கொண்டு இருக்கலாம். இந்த ஜெபத்திற்கு