இடுகைகள்

murai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மல்லித்தூள் அரைக்கும் பாரம்பரிய முறை | Malli thool araikkum parambariya murai

படம்
[ad_1] - Advertisement - பாரம்பரியமான முறையில் மல்லித்தூள் அரைத்து சமையல் செய்யும் பொழுது அந்த சமையலின் ருசியே அலாதியானதாக, தனித்துவமானதாக இருக்கும். செட்டிநாடுகளில் எல்லாம் ஒவ்வொரு மசாலாவும் தனித்தனியாக அரைத்து செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். கடையில் மல்லித்தூள் வாங்கினால் அதன் வாசம் கூட அவ்வளவாக அடிப்பதில்லை. கலப்பட உலகில் நம் கைப்பட அரைத்து மசாலாக்களை பயன்படுத்துவது தான் என்றுமே நல்லது. மணக்க மணக்க மல்லித்தூள் அரைக்கும் பாரம்பரிய முறையை பற்றிய தகவல்களை இந்த சமையல் குறிப்பு பதிவில் தொடர்ந்து காணலாம் வாருங்கள். சமையல் என்றாலே அதற்கு மல்லித்தூள் தான் முதன்மையானது. எந்த குழம்பு வைத்தாலும் மல்லித்தூள் சேர்த்து செய்யும் பொழுது அந்த குழம்புக்கு தனி ருசி கிடைக்கும். குழம்பு மிளகாய் தூள் அரைக்கும் பொழுது பாதி அளவிற்கு மல்லித்தூள் சேர்ப்பார்கள். தனியாக மல்லித்தூள் அரைத்து வைத்துக் கொள்வதும், விதவிதமான குழம்பு வகைகளை செய்வதற்கு உதவும். - Advertisement - மல்லித்தூள் அரைக்க தேவையான பொருட்கள் : மல்லி விதைகள் – ஒரு கிலோ சீரகம் – 100 கிராம...