இடுகைகள்

murugan லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Amuthamalai Murugan Temple in Tamil

படம்
[ad_1] Amuthamalai Murugan Temple in Tamil புகழ்பெற்ற அமுதமலை முருகன் கோவில், புனித ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இது முந்தைய துவாபரயுகம் வரை காணப்பட்டது. இந்த கலியுகம் தொடங்கிய பிறகு, இந்த கோவில் சாதாரண மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டது, ஆனால் இந்த கோவில், இந்திரன், நாரதர், சூரியன் மற்றும் சந்திரன் போன்ற முனிவர்கள், மகான்கள், சித்தர்கள் மற்றும் தேவர்களின் கண்களுக்கு தெரியும். இந்த கோவிலுக்கு வருபவர்கள் அமரத்துவம் பெற்று சில லட்சம் வருடங்களாவது வளமான வாழ்க்கை வாழ்வார்கள், ஏனெனில் இந்த கோவில் மலை அமுதம் (தெய்வீக அமிர்தம்) நிறைந்தது, மேலும் ஏராளமான மருத்துவ மூலிகைகளும் இங்கு காணப்படுகின்றன! நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களைப் போல் அல்லாமல் முருகப்பெருமான் ஒருபோதும் தூங்க வேண்டியதில்லை, உணவு உட்கொள்ளவேண்டியதில்லை, ஆனாலும் கருணை பொங்கும் கண்களால் நம்மை எப்போதும் கருணையுடன் பார்த்து சுறுசுறுப்பாக இருக்கிறார். ஒரு வருடத்தில் 365 நாட்களும் அவர் சுறுசுறுப்பாக இருப்பார், இன்னும் அவர் அப்படித்தான் இருப்பார். முருகப்பெருமானை தவறாமல் வழிபட்டாலொழிய அவரை...

ஞானமலை முருகன் கோவில்: Gnanamalai Murugan Temple

படம்
[ad_1] Sri Gnanamalai Subramaniyaswamy Temple in Tamil முருகப்பெருமானின் முக்கியத்துவத்தை அவரது தந்தையான சிவபெருமானால் கூட முழுமையாக விவரிக்க முடியாது, மேலும் அவரை அன்றாட வாழ்க்கையில் எவரும், குறிப்பாக அவரது பக்தர்களால் தவிர்க்க முடியாது! இந்து மதத்தில் பல்லாயிரக்கணக்கான தெய்வங்கள் இருந்தாலும் நமது வழிபாட்டில் முருகப்பெருமான் முக்கிய இடம் பெற்றுள்ளார். முருகனுக்கு உலகம் முழுவதும் கோவில்கள் உள்ளன. ஆனால் சில முருகன் கோவில்கள் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன, அத்தகைய ஒரு கோவில், அற்புதமான ஞானமலை முருகன் கோவில். ஞானமலை முருகன் ஞானிகளுக்கும், மகான்களுக்கும் மட்டுமின்றி நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கும் தனது அருளைப் பொழிவார். இந்த கோவில் புகழ்பெற்ற ஸ்ரீ சோளிங்கர் நரசிம்மர் கோவிலிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சோளிங்கருக்கு வருபவர்கள் இந்த அற்புதமான ஞானமலை முருகன் கோவிலுக்கும் கண்டிப்பாக விஜயம் செய்ய வேண்டும். அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகனின் தாமரைத் திருவடிகளைக் கண்டு தன் இஷ்ட தெய்வ முருகனின் அருளைப் பெற்றுள்ளார். இந்த அற்புத கோவிலில் முர...

Agathiyar Murugan Manthiram - அகத்தியர் முருகன் மந்திரம்

படம்
[ad_1] Agathiyar Murugan Manthiram in Tamil அகத்தியர் (About Agathiyar) 🛕 அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். 🛕 சித்தர்கள் பலர் முருகப்பெருமானை வழிபடுவது நாம் அறிந்ததே. அதிலும் தமிழ் மொழிக்கான இலக்கணத்தை வகுத்த அகத்திய மாமுனிவர், தமிழ் கடவுள் முருகன் மீதும் பெரும் பக்தி கொண்டிருந்தார். மானிட நலனுக்காக பல மந்திரங்களை அகத்தியர் தந்துள்ளார். அந்த வகையில் நமது சொல்லும் செயலும் தெளிவாக இருக்க அகத்தியர் அருளிய முருகன் மந்திரம் பற்றி பார்க்கலாம்: அகத்தியரின் முருகன் மந்திரம் ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந...

Arupadai Murugan Arutpaamaalai in Tamil

படம்
[ad_1] ஆக்கம்: முனைவர் த. சிதம்பரம்துறைத்தலைவர் (பொறுப்பு)பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரிராஜபாளையம் – 626108மொபைல் நம்பர்: 9842898370 Arupadai Murugan Arutpaamaalai in Tamil பழநியாண்டவர் பாமாலை ஞாலம் தான் உய்ய வேண்டி        ஞானமும் செழிக்க வேண்டிஅம்மையப்பனை வலம் சுற்றிய        ஐந்து கரத்தோன் ஆசியோடுஉலகம் தான் புண்ணியமெய்த        உவகையுடன் மயிலேறிவந்ததண்டம் தாங்கும் ஞான உருவினனை        தரணியைக் காக்க போற்றுகின்றோம்! ஞானமே உருக்கொண்டவன்        ஞானப் பழம் வேண்டிநின்றான்ஐங்கரனவன் கவர்ந்ததனால்        அழகனவன் கனல் கண் காட்டஅம்மையப்பன் ஆறுதல் சொல்ல        அடிபழனிதனில் திருவடி வைத்துநின்றதண்டம் தாங்கும் ஞான உருவினனை        தரணியைக் காக்க போற்றுகின்றோம்! ஈன்றோர்கள் இன்முகம் மலர        அறுமுகனின் திருமுகம் மலரஅன்னை பிதா முன்னறி தெய்வமென்று        தமிழ் கிழவி தமிழிசை பாடிபைந்தமிழால் பண்ணமைத்தாள் பல்வாராய்        எண்ணியதோ திண்ணமென்ற குலவிதனைதண்டம் தாங்கும் ஞான உருவினனை        தரணியைக் காக்க போற்றுகின்றோம்! உமையவளும் மனமிரங்கி உவகையுடன்        உரைத்திட்டாள் திர...

ராஜயோகம் தரும் முருகன் மந்திரம் | rajayogam tharum murugan manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை என்று கூறுவார்கள். நம்முடைய இஷ்ட தெய்வமோ, குலதெய்வமோ அவர்களை நம்பி அவர்களிடம் நம்முடைய வாழ்க்கையை நாம் ஒப்படைத்து விட்டோம் என்றால் அவர்களே நமக்கு நல்ல வழியை காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது. இதில் சரணாகதி என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி சரணாகதி அடைந்த நிலையில் அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்களை நாம் மனதார உச்சரித்துக் கொண்டே இருக்கும் பட்சத்தில் நமக்கு அந்த தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அதனால் வாழ்க்கை சிறப்பாக அமையும். அந்த வகையில் ராஜ யோகத்துடன் வாழ்வதற்கு முருகப்பெருமானின் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். ராஜயோகம் தரும் முருகன் மந்திரம் இந்த கலியுகத்தில் பலராலும் வழிபட விரும்பக்கூடிய ஒரு தெய்வமாக திகழ்பவர் முருகப்பெருமான். இவருக்கு அறுபடை வீடுகள் என்று ஆறு வீடுகளில் இருந்தாலும் அதை தவிர்த்து எங்கெங்கெல்லாம் அவர் குடி கொண்டிருக்கிறாரோ அங்கெல்லாம் பக்தர்களின் கூட்டம் என்பது வந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கியம...

மனபாரத்தை நீக்கும் முருகன் மந்திரம் | Mana parathai neekum murugan manthiram

படம்
[ad_1] - Advertisement - இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை யார் ஒருவர் முழு மனதோடு நினைத்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தீர்வதற்காகவும் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காகவும் பல வழிகளில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது உண்டு. அந்த வகையில் இந்த மந்திரம் குறித்த பதிவில் நம்முடைய மனப்பாரம் நீங்க சொல்ல வேண்டிய முருகனின் மந்திரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். எந்தவித படிப்பறிவும் இல்லாமல் தெய்வத்தின் பெயரை மட்டும் மனதார ஒரு முறை கூறினாலே அந்த தெய்வத்தின் அருள் என்பது கிடைக்கும் என்று புராணங்களில் பல கதைகள் கூறப்பட்டு இருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது தெய்வத்திற்கே உரிய மந்திரங்களை முழு மனதோடு நாம் கூறினோம் என்றால் அதற்குரிய பலன் நமக்கு எந்த அளவுக்கு கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதனால்தான் பலரும் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். - Advertisement - மேலும் நாம் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம்...

வெற்றியைத் தரும் முருகன் வழிபாடு | Vetriyai tharum murugan valipadu

படம்
[ad_1] - Advertisement - கலியுக தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானிடம் நாம் எந்த கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கையை அவர் உடனே நிறைவேற்றி தருவார் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முழுமனதோடு நாம் வேண்டக்கூடிய ஒவ்வொரு வேண்டுதலும் முருகப்பெருமானின் அருளால் நடந்தேறும் என்று தான் கூற வேண்டும். நம்முடைய பக்தி உண்மையாக இருக்கிறதா என்பதற்காக சோதனை வைத்தாலும் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவராகவே முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் வெற்றிகள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகப்பெருமானை வழிபடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானை சரணாகதி அடைந்து வேலுண்டு வினையில்லை என்ற கூற்றுக்கு இணங்க அவரையும் அவர் கையில் இருக்கக்கூடிய வேலையும் மனதார நினைத்துக் கொண்டு நாம் மேற்கொள்ளும் வழிப்பாடானது நமக்கு வெற்றிகளை குவித்து தரும்...

ஞானத்தைத் தரும் முருகன் மந்திரம் | Gnanathai tharum murugan manthiram

படம்
[ad_1] - Advertisement - கலியுக தெய்வமாக கருதப்படுபவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை பல வேண்டுதலுக்காக பல வழிமுறைகளில் நாம் வழிபாடு செய்வோம். முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது நாம் என்னென்ன வரங்களை கேட்டு வழிபாடு செய்கிறோமோ அந்த வரங்கள் அனைத்தையும் நமக்கு அருள்வார் என்பது பலரும் அனுபவபூர்வமாக கண்ட உண்மை. அப்படிப்பட்ட முருக பெருமானின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒவ்வொரு தெய்வத்திற்கும் அவர்களுக்குரிய மந்திரங்கள் என்று இருக்கும். அந்த மந்திரங்களை நாம் உச்சரிப்பதன் மூலம் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் சாதாரண வழிபாட்டை விட மந்திர வழிபாட்டிற்கு இன்னும் பலன்கள் அதிகமாகவே கிடைக்கும் என்று கூட கூறலாம். ஆனால் இதில் முழு மனதோடு மனதை ஒருநிலைப்படுத்தி எந்தவித கவனச் சிதறளும் இல்லாமல் கூற வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் இன்று முருகன் மந்திரத்தை பார்ப்போம். - Advertisement - முருகப்பெருமானுக்குரிய பாடல்கள் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் கந்தர் அனுபூதி. கந்தர...

நினைத்தது நடக்க முருகன் மந்திரம் | ninaithathu nadakka murugan manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடிய தெய்வமெனில் அது கந்த பெருமாள் தான். முருகா என்று சொன்னாலே உருகிவிடும் அளவிற்கு இன்று பக்த கோடிகள் பெருகி உள்ளார்கள் எனில் அதற்கு கந்தனின் கருணை தான் காரணம் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. அப்படியான கந்தன் தன்னுடனே எப்பொழுதும் இருக்க வேண்டும் அவருடைய அருள் எப்போதும் நமக்கு கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர்கள் இருப்பார்களா என்ன?. இந்த ரகசியத்தை நீங்களும் தெரிந்துகொண்டால் கந்தன் எப்பொழுதும் உங்களுடனே இருப்பார் என் பதில் துணியும் சந்தேகமே இல்லை. அப்படி அவர் தன்னுடனே இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். - Advertisement - முருகன் அருள் கிடைக்க மந்திரம் முருகனின் அருள் கிடைக்க பல வழிபாட்டு முறைகள் நம்மில் உள்ளது கிருத்திகையில் விரதம் இருந்து வழிபடுவது சஷ்டி திதியில் விரதம் இருப்பது செவ்வாய் தோறும் விரதம் இருப்பது என பல்வேறு விதமான விரதங்களும் பூஜை முறைகளும் வழிபாடுகளும் உள்ளது. அப்படி வழிபாடு செய்யும் பொழுது நாம் ஒரு மந்த...

கஷ்டங்கள் நீங்க முருகன் மந்திரம் | kastangal neega murugan manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒருவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களை சமாளித்து வெளியில் வருவது தான் வாழ்க்கை என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட கஷ்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு முயற்சிகளை செய்தும் வெளியில் வர முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும். முருகப்பெருமானின் அருளை பெற்று யார் ஒருவர் தன்னுடைய கஷ்டங்களிலிருந்து விடுபட முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும் என்று கூறப்படுகிறது. அப்படி கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கு முருகப்பெருமானின் மந்திரத்தை எந்த முறையில் உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகன் மந்திரம் தேவர்களின் கஷ்டங்களை போக்குவதற்காக அவதரித்தவர் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நாம் வழிபடும் பொழுது நம்முடைய கஷ்டங்களும் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். அவரை முழுமனதோடு சரணாகதி அடைந்து அவரின் மந்திரங்களை உச்சரித்தாலேயே நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு வேலும் மயிலும் ஓடோடி வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ம...

பக்தரின் கடனை தீர்க்க முருகன் | Arulmigu thiruchendur murugan temple

படம்
[ad_1] - Advertisement - ‘மனிதர்களிடம்தான்  கோளாறுகள் இருக்கின்றன. மார்க்கங்களில் இல்லை’ என்பார்கள். இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பறைசாற்றும்விதமாக ஒவ்வொரு காலத்திலும் அநேக நிகழ்வுகள், நம் மண்ணில் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இங்கு திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய அற்புதத்தைப் பார்ப்போம். திருச்செந்தூர் அருகே இருக்கும், ‘காலன் குடியிருப்பு’ எனும் பகுதி, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழும் பகுதி. இந்த ஊரில் மீராக் கண்ணு என்னும் புலவரும் வாழ்ந்து வந்தார். கவிதை இயற்றுவதில் திறன்மிக்க இவரது வாழ்க்கையை, வறுமை இருள் எப்போதும் சூழ்ந்தே இருந்தது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று இருந்தார். - Advertisement - உரிய நேரத்தில் அவரால் பணத்தைத் திருப்பித்  தர முடியவில்லை. ஆனால், வட்டித் தொகையோ பல மடங்கு ஏறிக்கொண்டே போயிருந்தது. நீண்ட நாட்களாகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராததால் வணிகர் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், மீராக் கண்ணுவால் பணத்தைத் திரும்பத் தர முடியவில்லை. இ...