இடுகைகள்

சயமற லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கறி சுவையில் மீல்மேக்கர் 65 எளிதான செய்முறை

படம்
[ad_1] கறி சுவையில் மீல்மேக்கர் 65 எளிதான செய்முறை [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/

ஐந்து நிமிடத்தில் பூண்டு சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக காலை நேரத்தில் அவசர அவசரமாக வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் பள்ளிக்கூடத்திற்கு செல்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு காலை மதிய உணவுகளை தயார் செய்து தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்மணிகளாக இருந்தாலும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி செய்யும் பொழுது காலை நேர டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு எதுவும் செய்ய முடியாமல் பலரும் கஷ்டப்படுவார்கள். இதனால் வீட்டில் சண்டை கூட ஏற்படலாம். ஏன் இன்னும் சில வீட்டில் குழந்தைகளும், பெரியவர்களும் ஒழுங்காக சாப்பிடாமல் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிமையாக ஐந்தே நிமிடத்தில் ஒரு சட்னியை தயார் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த சட்னி உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய சட்னியாகவும் அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய சட்னியாகவும் திகழ்கிறது. இந்த சட்னியை பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவில் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பூண்டு சட்னியை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித

ஆந்திரா ஸ்டைல் பெசரட்டு தோசை செய்முறை

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தனித்துவமான உணவு வகைகள் உண்டு. அந்த வகை பட்டியலில் ஆந்திராவில் பிரசித்தி பெற்ற இந்த பெசரட்டு தோசை சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய இந்த பெசரட்டு தோசையை அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை தரும். மணக்க மணக்க மொறுமொறுன்னு பெசரட்டு தோசை எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இனி கற்றுக் கொள்ள இருக்கிறோம். ஆந்திரா பெசரட்டு தோசை செய்ய தேவையான பொருட்கள்: பச்சைப் பயிறு – ஒரு கப் பச்சரிசி – கால் கப் இஞ்சி – ஒரு துண்டு பச்சை மிளகாய் – இரண்டு சீரகம் – ஒரு டீஸ்பூன் கல் உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 1 பெசரட்டு உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: ரவை – அரை கப் தண்ணீர் – ஒரு கப் கடுகு – சிறிதளவு உளுந்து – அரை டீஸ்பூன் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – ஒன்று பெசரட்டு தோசை செய்முறை விளக்கம்: முதலில் பச்சைப் பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். பச்சை பயறுடன் பச்சரிசியும் சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற விடுங்கள். ஆ

சீரக குழம்பு செய்முறை | Seeraga kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டி தான் அன்றைய காலத்தில் மருந்தகமாக செயல்பட்டது. நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் உடனே சமையலறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பொருட்களை தான் கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களால் அந்த காலத்தில் அவ்வளவு ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய காலத்தில ஒரு சிறிய உடல்நிலை பாதிப்பாக இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிக்கு போய் அங்கு கொடுக்கக்கூடிய மருந்துகளையும் ஊசிகளையும் போட்டு நம்முடைய இயற்கையான உடல் அமைப்பையே நாம் மாற்றி விடுகிறோம். அந்த வகையில் நம்முடைய வீட்டில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது தான் சீரகம். சீரகம் என்றாலே நம்முடைய அகத்தை சீராக்கக் கூடியது என்று அர்த்தம். நம்முடைய உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் சீராக அதாவது சரியாக செயலாற்ற வேண்டும் என்றால் அது சீரகத்தால் மட்டுமே முடியும். அதனால்தான் நம்முடைய சமையலில் நாம் சீரகத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது ரசம் வைத்து கொடுப்பதற்கு காரணமும் அதுதான். மேலும் அஜீரண கோளாறு நீக்க

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சி

ஆரோக்கியமான வாழைத் தண்டு சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பல நோய்களை தீர்க்கக் கூடிய அற்புதமான பொருட்களாக திகழ்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் ஒவ்வொன்றும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட சத்து மிகுந்த பொருட்களில் ஒன்றாக திகழ்வது தான் வாழைத்தண்டு. வாழைத்தண்டை வைத்து எப்படி சட்னி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வாழைத்தண்டில் விட்டமின் பி6, இரும்புச்சத்து போன்றவை இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதயம் மற்றும் உடல் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது. மேலும் வாழைத்தண்டை ஜூஸாக செய்து சாப்பிடும் பொழுது சிறுநீரக கற்கள் கரையும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகி

முளைகட்டிய பயறு அடை செய்முறை | Mulaikattiya payaru adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் இருக்கும் பலருக்கும் சத்துக் குறைபாடு என்பது அதிக அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பது தான். அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் அவர்களுடைய உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இப்படி அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் சீராக இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவையான அளவு சத்துக்கள் கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான சத்துதான் புரத சத்து. இந்த புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடியது பயறு வகைகளில் தான். அதிலும் குறிப்பாக முளைகட்டிய பயறு வகைகளில் அதிக அளவில் புரத சக்தி இருக்கிறது. முளைகட்டிய பயிறு வகைகளை எந்த வடிவில் நாம் செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அந்த முளைகட்டிய பயறை வைத்து அடை தோசை செய்து தரும் பொழுது அதை என்னவென்று தெரியாமலேயே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அடை தோசை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Adver

நேந்திர பழ ஜாமுன் செய்முறை | Nendra pazha jamun recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - கேரளாவில் அதிகளவில் கிடைக்கக்கூடிய நேந்திரம் பழத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். ரத்த சோகை பிரச்சினை வராமல் தவிர்க்கப்படும். மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவாகும். நரம்பு தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நல்ல தூக்கத்தையும் ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு மருத்துவ குணம் மிகுந்த நேந்திரம் பழத்தை வைத்து நாம் நம்முடைய வீட்டில் இனிப்பு வகைகளை செய்து தரலாம். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத்தை வைத்து ஜாமூன் செய்து தரும் பொழுது யாருமே வேண்டாம் என்று கூறவே மாட்டார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நேந்திரம் பழத்தை வைத்து எப்படி நேந்திரம் பழ ஜாமூன் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தண்ணீர் – 1/2 டம்ளர் சர்க்கரை – 500 கிராம் குங்குமப்பூ – ஒரு கிராம் ஏலக்காய் – 2 சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை நேந்திரம் பழம் – 2 நெய் பொ

பயணத் துவையல் செய்முறை | travel time thuvaiyal recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக நாம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக பயணத்தை மேற்கொள்ளும் பொழுது வீட்டிலேயே உணவு வகைகளை தயார் செய்து எடுத்துச் செல்வோம். இவ்வாறு நாம் தயார் செய்து எடுத்துச் செல்லும் பொழுது பெரும்பாலும் இட்லி, சப்பாத்தி எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் என்று எடுத்துச் செல்வோம். அப்பொழுதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்காக. அந்த சமயத்தில் இதற்கு தொட்டுக் கொள்வதற்காக சட்னி தயார் செய்வோம். இந்த சட்னியை சற்று பக்குவமாக தயார் செய்யாவிட்டால் அது விரைவிலேயே கெட்டுப் போய்விடும். இதற்காக பலரும் புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி என்று சேர்த்து புதினா துவையலை செய்து எடுத்து வருவார்கள். இதற்கான மெனக்கெடு என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கக்கூடிய தேங்காயை வைத்து எளிமையான முறையில் இந்த துவையலை செய்தோம் என்றால் மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துவதாக இருந்தால் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் உபயோகப்படுத்தலாம். மேலும் இந்த பொருட்களை பொடியாக அரைத்து வைத்துக் கொண்ட

ராஜ்மா மசாலா செய்முறை | Rajma masala recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வட இந்தியர்கள் அதிக அளவில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய தானிய வகைகள் பல இருக்கின்றன. அவர்கள் அதிகப்படியான உணவான சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வதற்காக செய்யக்கூடிய டால் வகைகள் என்பது பல இருக்கின்றன. அப்படிப்பட்ட டால் வகைகளில் ஒன்று தான் ராஜ்மா டால், ராஜ்மாவை வைத்து இந்த முறையில் மசாலா செய்யும் பொழுது சப்பாத்தி, தோசை, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். சைவ உணவில் அதிக அளவு புரதச்சத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் ராஜ்மாவை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும். இதில் கொழுப்புகள் குறைவாக இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து ஆகிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ராஜ்மாவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். செரிமானம் சீராகும

மொச்சை பருப்பு சாதம் செய்முறை | Mochai paruppu sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட புரதச்சத்து தானிய வகைகளில் பருப்பு வகைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. அப்படி அதிக அளவில் கிடைக்கக்கூடிய பருப்பு வகைகளை வைத்து நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சாதம் செய்து தருவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள். அந்த வகையில் தான் இன்று நாம் மொச்சை பருப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு சாதத்தைப் பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். மொச்சை கொட்டையில் நம்முடைய உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் மினரல் போன்றவை இருக்கிறது. மேலும் இதில் விட்டமின் இ அதிக அளவில் இருக்கிறது. மொச்சைக்கொட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறையும். மேலும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை சரியாகும். மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது. உடலில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு மொச்சைக்கொட்டை உதவுகிறது. பெருங்குடல் புற்றுநோய் மற

தேங்காய் மாங்காய் சாதம் செய்முறை | Thengai mangai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் மதிய நேரத்தில் எப்போதும் போல் சாதம் குழம்பு காய்கறி என்று செய்து தருவதற்கு பதிலாக கலவை சாதத்தை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கலவை சாதம் எப்பொழுதும் செய்வது போல் புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் என்று செய்யாமல் மங்களூரில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சாதத்தை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த சாதத்தின் பெயர் தான் தேங்காய் மாங்காய் சாதம். இந்த சாதத்திற்கு தொக்கு ஒருமுறை செய்துவிட்டால் போதும். நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சாதத்தில் கலந்து சாப்பிட்டு விடலாம். அந்த அளவிற்கு சுவையாகவும், அதேசமயம் பல நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இந்த தொக்கு திகழ்கிறது. இதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 7 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 காஷ்மீரி மிளகாய் – 4 சீரகம் – ஒரு டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வெள்ளை எள் -1

சோள ரவா இட்லி செய்முறை | Corn Rava Idly Recipe in Tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் சிற்றுண்டி என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது இட்லி தோசை தான். அரிசி மாவில் செய்யப்படும் இட்லி தான் மிகவும் சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட. என்ன தான் உடம்புக்கு நல்லது என்றாலும் தினமும் இதையே செய்து கொடுத்தால் சலித்து போகத் தான் செய்யும்.ஆகையால் எப்போதும் ஒரே போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக் கூடிய சோள ரவையில் ஒரு முறை இட்லி தோசை செஞ்சு கொடுத்து பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. வாங்க அந்த இட்லி எப்படி செய்யறதுன்னு இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சோள ரவை – 1 கப்,தயிர் – 1 கப்,வெங்காயம் – 1,கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்,கடுகு – 1/2 ஸ்பூன்,உப்பு – 1/2 ஸ்பூன்,சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்,கேரட் – 1 துருவியது,வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது,பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது,கொத்தமல்லி – சிறிதளவு பொடியாக நறுக்கியது,எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன். - Advertis

வேர்க்கடலை பூண்டு பொடி சாதம் செய்முறை

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய பாரம்பரிய உணவுகளை நாம் செய்வதற்கு சிறிது சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது என்பதற்காகவே அதை எளிமையாக செய்து முடிக்கும் வகையிலும் அதே சமயம் ஆரோக்கியம் மிகுந்ததாகவும் இருப்பதற்காக அதை நாம் பொடி வகையில் தயார் செய்து வைத்துக் கொள்கிறோம். இப்படி கருவேப்பிலை பொடி, பிரண்டை பொடி, பூண்டு பொடி, வேர்க்கடலை பொடி என்று பல பொடிகள் இருக்கின்றன. அந்த பொடிகளில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் வேர்கடலை பூண்டு பொடி எப்படி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். இந்த வேர்க்கடலை பூண்டு பொடி என்பது ஆந்திராவில் மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. இதை ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் நமக்கு இட்லி, தோசை போன்ற டிபன் ஐட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம் சாப்பாட்டிற்கும் போட்டு சாப்பிடலாம். இதை குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் தயார் செய்து அனுப்பலாம். குழம்பு செய்ய நேரமில்லை என்னும் பட்சத்தில் இந்த பொடி நமக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். - Advertisement - தேவையான பொருட்கள் கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் வேர்கடலை – 150 கி

பிரண்டை குழம்பு செய்முறை | Pirandai kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உணவே மருந்து என்று கூறக்கூடிய நம்முடைய பாரம்பரியத்தில் பலரும் இன்றைய காலத்தில் மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை தவிப்பதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் மிகுந்த பொருட்களை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும். அந்த வகையில் பிரண்டையை வைத்து செய்யக்கூடிய ஒரு குழம்பை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். பிரண்டையில் அதிக அளவு கால்சியம் சக்தி இருக்கிறது என்பதால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் பிரண்டையை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் விரைவிலேயே கூடி வலுமை பெறும். இதோடு மட்டுமல்லாமல் சோர்வோடு இருப்பவர்களுக்கு பிரண்டையை தருவதன் மூலம் அவர்கள் சுறுசுறுப்பாக திகழ்வார்கள். ஞாபக சக்தி அஅதிகரிக்கும். பசியை தூண்டும். உயரத்த அழுத்தம் இருப்பவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் பிரண்டையை அடிக்கடி தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதே போல் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது

டீக்கடை மசால் வடை செய்முறை | teakadai masal vadai seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - டீ குடிக்கும் பொழுது ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். வீட்டில் அதை செய்து தரச் சொன்னால் கடையில் இருக்கும் அளவிற்கு சுவையாக இருக்காது என்பதால் இந்த ஸ்னாக்ஸை சாப்பிடுவதற்காகவே கடைக்கு சென்று டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. அப்படி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ் வகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்வதுதான் மசாலா வடை என்ற பருப்பு வடை. இந்த பருப்பு வடையை டீக்கடையை விட மிகவும் சுவையாக எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்ப்போம். மதியம் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகி இருக்கும் என்பதால் பசிக்காகவும் ருசிக்காகவும் வாங்கி சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. வேலை நிமிர்த்தமாக வெளியில் செல்பவர்களும் சரி வீட்டில் இருப்பவர்களும் சரி இதற்கு விதிவிலக்கு அல்ல. வீட்டில் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் வீட்டிலேயே மிகவும் சுவையான மசால் வடையை செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ள முடியும். சரி இப்பொழுது டீக்கடையை விட சுவையாக மொறுமொறுவென்று மசால் வடை எப்படி செய்வது என்ப

வெண்டைக்காய் பச்சடி செய்முறை | Vendaikai pachadi recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - திருமணத்தில் செய்யக்கூடிய சமையலுக்கு என்று தனி ருசி இருக்கும். அதிலும் சில குறிப்பிட்ட காய்கறிகளை இது போன்ற திருமண விழாக்களில் சாப்பிட்டுவிட்டு அதே போல் வீட்டிலும் தயார் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எப்படி செய்தாலும் வீட்டில் அந்த சுவை வருவது மிகவும் கடினமாகவே இருக்கும். இதே போல் தான் இன்றைய சமையல் குறிப்பு குறித்த பகுதியில் கல்யாண வீடுகளில் செய்யக்கூடிய வெண்டைக்காய் பச்சடியை எப்படி நம்முடைய வீட்டில் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். வெண்டைக்காயில் பல நன்மைகள் இருக்கின்றன. வெண்டைக்காயை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. இது செரிமானத்திற்கு உதவி செய்யும். நார்ச்சத்து இதில் அதிக அளவில் இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கும், புற்றுநோயை தடுப்பதற்கும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதற்கும் உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த வெண்டைக்காய் கல்லீரலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் கண் நோய்கள் எதுவும் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. மேலும் இதய நோய்களிடம் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. - Advertisement - தேவையான பொருட்கள் எண்ணெய்

பாதாம் பிசின் பால் சர்பத் செய்முறை

படம்
[ad_1] - Advertisement - வெயிலின் தாக்கம் காரணமாக பலருக்கும் உடல் உஷ்ணம் அதிகரித்து அதனால் பல பாதிப்புகளுக்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் உடல் உஷ்ணத்தை தணிக்கவும் உதவக்கூடிய பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் பாதாம் பிசின். பாதாம் பிசினின் அதிக அளவு நார்ச்சத்தும், கனிம சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இந்த பாதாம் பிசினை தொடர்ச்சியாக உட்கொள்பவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல், மூலம் போன்ற பிரச்சனைகளுக்கும் இது நல்ல தீர்வாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட பாதாம் பிசினை வெறுமனே ஊறவைத்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த முறையில் சத்து மிகுந்த பால் சர்பத்தை செய்து சாப்பிடும் பொழுது அதனால் நல்ல பலன் கிடைக்கும் என்றுதான் கூற வேண்டும். அப்படிப்பட்ட பாதாம் பிசின் பால் சர்ப்பத்தை எந்த முறையில் செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் பாதாம் பிசின் – 5பாதாம் பருப்பு – 15பால் – 1/2 லிட்டர்பனங்கற்கண்டு – 2 ஸ்பூன்ஏலக்காய் – 2பழங்கள் – விருப்பத்திற்கு ஏற்ப செய்முறை முதல

ஸ்ரீலங்கா ஸ்பெஷல் தொதல் செய்முறை | Srilanka speical thothal recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு நாட்டிலும் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சில உணவுப் பொருட்கள் இருக்கும். அந்த உணவுப் பொருட்களை அடையாளப்படுத்துவதற்காகவே அந்த நாட்டை நாம் சேர்த்து அடையாளப்படுத்துவோம். அப்படி ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமாக திகழக்கூடியது தான் தோதல். இந்த இனிப்பானது தேங்காய் பாலை வைத்து செய்யக்கூடியதாக திகழ்கிறது. இதை கருப்பு அல்வா என்றும் கூறலாம். இருப்பினும் இது அல்வாவா கேக்கா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சுவையும் அபாரமாக இருக்கும். சட்டு என்று 20 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய இந்த அற்புதமான ஸ்ரீலங்காவில் பிரபலமாக திகழக்கூடிய தொதலை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் – ஒன்று வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – 2 கப் அரிசி மாவு – ஒரு கப் நெய் – ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன் வறுத்த முந்திரி – விருப்பத்திற்கு ஏற்ற செய்முறை முதலில் தேங்காயை பொடியாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை தேங்காய் பால் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் தேங்காய் பால் இரண்

முள்ளங்கி போண்டா செய்முறை | Mullangi bonda recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பல அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட முள்ளங்கியை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பலருக்கும் இந்த முள்ளங்கியின் வாடை என்பது துளி கூட பிடிக்காது. அதனால் அந்த முள்ளங்கியை சாப்பிடாமலேயே ஒதுக்கி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் முள்ளங்கி இருப்பதே தெரியாத அளவிற்கு செய்யக்கூடிய ஒரு முள்ளங்கி போண்டாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன. இது நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் உதவக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. மேலும் முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். புற்றுநோயை தடுப்பதற்கு உதவக்கூடியதாகவும் திகழ்கிறது. முள்ளங்கியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்தை தருவதோடு நம்மை சுறுசுறுப்பாகவும் செயலாற்ற உதவுகிறது. இது வயிறு மற்றும் கல்லீரலில் ஆரோக்கியத்தை பராமரிக்கக் கூடிய ஒன்றா