தாமல் வராகீஸ்வரர் கோவில் வரலாறு: Damal Varaheeswarar Temple
[ad_1]
Damal Sri Varaheeswarar Temple History in Tamil சிவஸ்தலம் கௌரி அம்பாள் சமேத ஸ்ரீ வராக ஈஸ்வரர் ஆலயம் மூலவர் வராகீஸ்வரர் உற்சவர் சந்திரமௌலீஸ்வரர் அம்மன் கெளரிஅம்மன் தல விருட்சம் நாகலிங்கம், வில்வம் ஊர் தாமல் மாவட்டம் காஞ்சிபுரம் தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தாமல் வராகீசுவரர் திருக்கோவில் “நகரேஷூ காஞ்சி” எனப்படும் புண்ய பூமியாகிய காஞ்சிபரம் மாவட்டத்தில் தாமல் என்ற இடத்தில் கி. மு 500 ஆண்டுகளுக்கு முந்தியது இந்த ஸ்ரீ வராகீஸ்வரர் ஆலயம். “தாமல்” என்றால் “தடாகம்”, “குளம்” என்று பொருள். இங்கு மிகப் பெரிய ஏரி இருந்ததாகக் கூறப்படுகிறது. காளஹஸ்திக்கு நிகரான ராகு கேது பரிகாரத்தலமாக கருதப்படுகிறது. இது மகாவிஷ்ணு சிவனை வழிப்பட்ட தலமாகும். சரபேஸ்வரர் லிங்க திருமேனியை அருளும் அபூர்வ திருத்தலம். வராகீஸ்வரர் ஸ்தல புராணம் ஒருமுறை இரண்யகசிபுவின் சகோதரன் இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்கு அடியில்மறைத்து வைத்துவிட்டான். அதனால் உலக இயக்கம் நின்றது. எல்லா உயிரினங்களும் துன்பப்பட்டனர். தேவர்களும், ரிஷிகளும் மஹா விஷ்ணுவை அடைய, மஹா விஷ...