இடுகைகள்

ஆரோக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு | mudi valarchiyai athigarikkum laddu in tamil

படம்
[ad_1] - Advertisement - முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக வளர வேண்டும், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய் பயன்படுத்துவது, ஹேர்பாக் போடுவது, சீரம் போடுவது என்று பல விதங்களில் முயற்சிகளை செய்வார்கள். எவ்வளவு எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர், சீரம் என்று எதையோ தடவினாலும் முடி வளரவே இல்லை. மேற்கொண்டு முடி உதிர்தல் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பவர்கள் இந்த ஒரு லட்டுவை தினமும் ஒன்று என்ற விதம் சாப்பிட்டால் போதும். இந்த லட்டுவை எப்படி செய்வது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு பொதுவாக முடி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வேண்டும். இதை வெளிப்புறமாக நாம் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உடலுக்குள்ளும் நாம் எடுத்துக் கொண்டால்தான் அதனுடைய முழு பலனையும் நம்மால் பெற முடியும். நம்முடைய உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் நம்முடைய முடியும் ஆரோக்கியமாக இ

முதுமையை தள்ளிப்போடும் உணவு பொருள் | Muthumaiyai thallipodum unavu porutgal

படம்
[ad_1] - Advertisement - சிறுவயதில் இருப்பவர்களுக்கு குறைவான வயது ஆகிறது என்று கூறினால் கோபம் வரும். இல்லை நான் பெரியவன் ஆகிவிட்டேன். எனக்கு அனைத்தும் தெரியும் என்று கூறுவார்கள். இதே 35 வயதிற்கு மேல் சென்ற பிறகு உனக்கு வயதாகி விட்டது என்று கூறினால், அப்பொழுதும் கோபம் வரும். பலருக்கும் தங்களுடைய வயதை வெளிப்படையாக காட்ட விருப்பம் இருக்காது. முடிந்த அளவிற்கு வயதை குறைத்துக் காட்ட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதற்காக செயற்கையான முறைகளை பின்பற்றாமல் இயற்கையிலேயே நம்முடைய உடலை முதுமை அடையாமல் பார்த்துக்கொள்ள முடியும். அப்படி முதுமையை தள்ளிப் போட உதவக்கூடிய சில உணவுப் பொருட்களை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் கண்டிப்பான முறையில் முதுமை என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். அது எப்பொழுது வருகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். பலருக்கும் தங்களுடைய இளம் வயதிலேயே முதுமை தோற்றம் என்பது ஏற்பட்டுவிடும். இன்னும் சிலருக்கோ வயதான பிறகும் அவர்கள் இளமையாக தோற்றம் அளிப்பார்கள். இதற்கு அவர்களின் மரபணுக்களே காரண

பல நோய்களை தடுக்கும் கீழாநெல்லி | Keelanelli juice benefits

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உடல் என்பது மிகவும் அற்புதமான ஒன்று. பொதுவாகவே நம்முடைய உடலில் ஏதாவது பாதிப்புகள் ஏற்படுகிறது என்றால் நம்முடைய உடலே அந்த பாதிப்பை சரி செய்வதற்கு முயற்சி செய்யும். அது புரியாமல் தான் நாம் சிறிது உடல்நிலை சரியில்லை என்றாலும் உடனே மருத்துவரை சென்று பார்க்கிறோம். நம் உடலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரி செய்வதற்காக உதவக்கூடிய உறுப்பாக திகழ்வதுதான் கல்லீரல். நம் உடலின் மருத்துவர் என்று கூட கல்லீரலை நாம் கூறலாம். அப்படிப்பட்ட கல்லீரலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவுவது தான் கீழாநெல்லி. கீழாநெல்லியை நாம் எப்படி சாப்பிட்டால் மருத்துவரை அனுக வேண்டாம் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். உடலின் மருத்துவர் கல்லீரல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாக தான் கீழாநெல்லி திகழ்கிறது. பொதுவாக மஞ்சள் காமாலை இருப்பவர்கள் கீழாநெல்லியை சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். இதற்கு காரணம் மஞ்சள் காமாலை ஏற்பட்டவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும். அந்த பாதிப்பை சரி செய்வதற

தோல் நோய்கள் நீங்க | Thool noigal neenga

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உடலில் இருக்கக்கூடிய மிகப்பெரிய உறுப்பாக திகழவது நம்முடைய தோல் தான். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இது இருக்கிறது. இதில் பல பிரச்சினைகள் ஏற்படும். அதனால் நமக்கு பல பாதிப்புகளும் உண்டாகும். மேலும் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய கழிவை வெளியேற்றுவதற்கு ஒரு முக்கியமான காரணியாக தோல் திகழ்கிறது. அதனால் தோலை எந்த அளவிற்கு நாம் சுத்தமாக பராமரிக்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தோலில் வரக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான வழிமுறையை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தோல் நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுடைய அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுவார்கள். மேலும் தோல் ரீதியாக ஏற்படக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் அது மற்றவர்களுக்கும் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் தோல் நோய் ஏதாவது ஏற்பட்டால் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து ஒதுக்கி வைக்க கூடிய சூழ்நிலை கூட உண்டாகும். அந்த சூழ்நிலை அனைத்தையும் நீக்கி அதே சமயம்

முடக்கத்தான் பலன்கள் | Mudakathan keerai benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் சில பொருட்களை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதன் மூலம் அது நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். இதை தான் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அதை நாம் மறந்துததால் தான் இன்றைய காலத்தில் பலரும் இளம் வயதிலேயே மூட்டு வலி, முடி உதிர்வு, இதய நோய் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இவை அனைத்தையும் சரி செய்வதற்குரிய ஒரு இலையைப் பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். பல இடங்களில் வேலி ஓரங்களில் கொடியாக படர்ந்து இருக்கக்கூடியது தான் இந்த முடக்கத்தான் கீரை. இந்த கீரையை பறித்து நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு பல ஆரோக்கியங்கள் ஏற்படும். இந்த கீரையின் பெயரே முடக்கத்தான் கீரை. அதாவது முடக்கு அறுத்தான் கீரை. முடக்கு என்றால் முடங்கிப் போவது. யார் ஒருவரால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிமையாக போக முடியாமல் முடங்கி கிடக்கிறார்களோ அவர்களுடைய முடக்கத்தை நீக்குவதற்குரிய அற்புதமான மருந்து என்பதால் தான் இதற்க

உடல் எடை குறைய ஜூஸ் | Udal edai kuraiya juice in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் பருமனுக்கு அதிவிரைவான எடை குறைப்பை தான் இன்று பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது. எதை செய்ய வேண்டுமானாலும் அதில் ஒரு தெளிவும், நிதானமும் தேவை. செய்யும் செயல் சரியானதாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எடை குறைப்புக்கு எந்த மாதிரியான ஜூஸ் பருகுவது நல்லது? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். இன்று இருக்கும் உணவு முறைப்படி பலரும் வேகமாக எடை கூடி விடுகின்றனர். ஆனால் அதை குறைப்பது தான் கடினமாக இருக்கிறது. ஏற்றிய எடையை குறைப்பதற்கு பெரும்பாடு பட்டு கொண்டிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பது இந்த பழச்சாறுகள்! பழச்சாறுகளை முறையாக பருகுவதன் மூலம் உடல் எடையை விரைவாகவே கணிசமாக குறைக்க முடியும். - Advertisement - உடல் எடையை குறைப்பதற்கு போதுமான அளவு தண்ணீரை தினமும் பருக வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதே போல உடற்பயிற்சி என்பதும் மிகவும் முக்கியம். என்ன தான் நீங்கள் உணவு முறை பழக்கத்தை மாற்றினாலும் ஒரு நாளைக்கு அரை மணி நேர உடற்பயிற்சி தான் முழுமையான எடை குற

காட்டு யானை போல உடல் பலம் பெற மன்னர்கள் இந்த அரிசியை தான் சாப்பிட்டார்களாம்! அது என்ன அரிசி? இப்போதும் கிடைக்கிறதா? எப்படி சாப்பிட வேண்டும்?

படம்
[ad_1] - Advertisement - அந்த காலங்களில் எல்லாம் மூன்று போகமும் விவசாயமும், ஏக்கர் கணக்கில் தோட்டங்கள் என்று விவசாயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். பல தலைமுறையினருக்கு முந்தைய மன்னர்கள் காலத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், நோய் நொடிகள் இல்லாமல் இருக்கவும் பல வகையான அரிசிகள் செழித்து வளர்ந்தன. நம் நாட்டில். பலரால் மறைக்கப்பட்ட இந்த அரிசிகள் இன்றளவிலும் விளைவிக்கப்பட்டு விற்பனைக்கு இருக்கின்றன. ஆனால் அது புழக்கத்தில் மக்கள் பயன்படுத்துவது இல்லை. இந்த மாதிரியான அரிசிகளை சாப்பிட்டால் தீராத உடல் பிரச்சினைகளை வருமுன் காக்கலாம் அல்லது வந்தவற்றையும் விரட்டி அடிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு சக்தி மிகுந்த அரிசி தான் இது! இது என்ன அரிசி? எப்படி இதை சாப்பிட வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். - Advertisement - சுமார் ஏழு அடிக்கும் உயர்வாக செழித்து வளரக் கூடிய இந்த அரிசி 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை மகசூல் ஆகக் கூடியது. காட்டில் வளரக்கூடிய இந்த அரிசி காட்டு யானையின் பலத்தை நமக்கு கொடுக்கக் கூட

தினமும் தலைக்கு குளித்தல் | Daily hair wash is good or bad Tamil

படம்
[ad_1] - Advertisement - அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப தலைக்கு குளிப்பது என்பது தொடர்ந்து செய்து வருகிறோம். சிலர் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு. சிலர் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே தலைக்கு தண்ணீரை ஊற்றி குளிப்பார்கள். இப்படி இருக்க தினமும் தலைக்கு குளித்தால் நல்லதா? அல்லது கெட்டதா? எப்படி தலைக்கு குளிக்க வேண்டும்? எப்படி தலைமுடியை பராமரிக்க வேண்டும்? என்பதை தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். உச்சந்தலையில் நீங்கள் ஊற்றும் தண்ணீர் தான் உடல் முழுவதும் இருக்கும் உஷ்ணத்தை தணிக்கிறது எனவே தலைக்கு குளிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல! நீங்கள் தலைக்கு குளிக்கும் முறையை வைத்தும் தான் உங்களுடைய தலைமுடியின் வளர்ச்சியும், உடல் நலமும் அடங்கி உள்ளது எனவே இதற்கு நீங்கள் கட்டாயம் முக்கியத்துவம் கொடுத்து தான் ஆக வேண்டும். - Advertisement - உடலுக்கு உள்ளே எடுத்துக் கொள்ளும் உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல உடலுக்கு வெளியில் தலையில் நாம் ஊற்றும் தண்ணீரும் மிகவும் முக்கியமானது. தினமும் தலைக்கு குளிப்பவர்கள் அவர்களுடைய உடல் நிலையை பொறுத்த

ஆவாரம் பூ சட்னி செய்முறை | Aavaram poo chutney recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் இருந்தாலும் அதை இயற்கையான முறையில் மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலரே, அப்படிப்பட்டவர்கள் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பதிவில் ஆவாரம் பூவை வைத்து சட்னி செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதிகமான அளவு துவர்ப்பு சுவை கொண்ட அனைத்து பொருட்களும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உறுதுணையாக திகழக்கூடியவை. அதிலும் குறிப்பாக ஆவாரம் பூ சிறந்த பங்கு வகிக்கிறது. “ஆவாரைக் கண்டார் சாவார் உண்டோ” என்று பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவை பல வகைகளில் நாம் உள்ளுக்குள் எடுக்கலாம். அதில் ஒரு வகையாக தான் ஆவாரம் பூவை வைத்து சட்னி செய்யும் முறையை பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ – ஒரு கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி அளவு தக்காளி – 2 இந்து உப்பு – தேவையான அளவு செய்முறை: ஆவாரம் பூ, சின்ன வெங்காயம், தக்காளி இவை அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து கொள்ள

முடி உதிர்வை தடுக்கும் பானம் | Hair loss preventing drink

படம்
[ad_1] - Advertisement - முடி உதிர்தல் பிரச்சனை என்பது இன்றைய காலத்தில் பலராலும் சந்திக்க கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்கிறது. இந்த பிரச்சினையை சரி செய்வதற்கு பலர் ஹேர் ஆயில், ஹேர் மாஸ்க், அதுமட்டுமல்லாமல் மருத்துவரிடம் சென்று சில சிகிச்சைகள் என்று பலவற்றை மேற்கொள்கிறார்கள். இவற்றை செய்வதன் மூலம் முழுமையாக முடி உதிர்தல் பிரச்சினை நின்று விட்டதா? என்று கேட்டால் கண்டிப்பான முறையில் இல்லை என்று தான் கூற வேண்டும். காரணம் முடி உதிர்தல் என்பது வெளிப்புற காரணிகளால் ஏற்படக்கூடிய விஷயம் மட்டுமல்லாமல் உடலுக்குள் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் நீக்குவதற்குரிய செயலாகவே திகழ்கிறது. அதனால் வெளியில் நாம் எவ்வளவு செய்தாலும் உள்ளுக்குள் அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதன் மூலமே முழுமையாக முடி உதிர்வை நம்மால் தடுக்க முடியும். இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் எந்த பானத்தை நாம் தினமும் அருந்தி வந்தால் முடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்று ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும் என்றுதான் பார்க்கப் போகிறோம். - Advertisement - முடி உதிர்தல் பிரச்சினை என்பது பல காரண

வேர்க்குரு நீங்க டிப்ஸ் | Verkuru neenga tips in tamil

படம்
[ad_1] - Advertisement - வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் அதிக அளவில் வேர்வை ஏற்படும். அதே சமயம் வேர்க்குருவும் ஏற்படும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை வரத்தான் செய்யும். வேர்க்குருவால் அரிப்பு ஏற்படும். இதை நாம் சொரிய சொரிய வேர்க்குரு அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படிப்பட்ட வேர்க்குருவை எப்படி எளிய முறையில் சரி செய்வது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். உடல் வெப்பமாவதை தவிர்ப்பதற்காக மட்டுமே தான் வியர்வை ஏற்படுகிறது. பொதுவாக நம்முடைய உடல் சூடு அதிகரிக்கும் பொழுது வேர்வை துளிகள் உற்பத்தியாகி உடலை குளிர்ச்சி அடைய செய்யும். ஆனால் இந்த வெயில் காலத்தில் வெளிப்புறத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பமான சூழ்நிலை உருவாகும். அப்பொழுது இன்னும் அதிகமாக வியர்வை ஏற்படும். - Advertisement - இப்படி ஏற்படக்கூடிய வியர்வை சரியாக நம்முடைய சருமத்திலிருந்து வெளியில் வராமல் அந்த சரும துளைகளில் ஏதேனும் அடைப்பு இருந்தால்தான் இது வியர்வை கொப்பளம் ஆக வரும். அதாவது

பாதாம் பிசின் நன்மைகள் | Badam pisin benefits

படம்
[ad_1] - Advertisement - வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்வதற்காக என்னென்ன பொருட்களை எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தேடி கண்டுபிடித்து சாப்பிட தொடங்குவோம். வெயில் காலம் முடிந்ததும் அந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விடுவோம். அந்த வகையில் நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருளாக கருதப்படுவது தான் பாதாம் பிசின். வெயில் காலத்திற்கு மட்டும் சாப்பிட வேண்டிய பொருளாக இது திகழ்வது கிடையாது. இதில் பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. அந்த மருத்துவ குணங்கள் என்ன என்பதை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக வெயில் காலத்தில் சப்ஜா விதைகள், பாதாம் பிசின், நன்னாரி சர்பத், எலுமிச்சம்பழ ஜூஸ், நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய் போன்றவற்றை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வோம். இவ்வாறு நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணமாவதை நம்மால் தவிர்க்க முடியும். இவை அனைத்தும் உடல் உஷ்ணத்தை மட்டும் தான் சரி செய்பவை என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு பொருளுக்கும் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

வெண்பூசணி சாறு பயன்கள் | Ash gourd juice benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் நம்முடைய அன்றாட உணவு பழக்கமாக உட்கொள்ளும் பொழுது நம்முடைய உடலுக்கு பல அற்புதமான நன்மைகள் ஏற்படும். நன்மைகளோடு மட்டுமல்லாமல் பல நோய்களையும் வராமல் தடுக்கும். இருக்கும் நோய்களையும் கட்டுப்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆரோக்கியம் குறித்த பதிவில் வெண்பூசணி சாறை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். வெண்பூசணி சாறை நாம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சி பூர்வமாக கூறப்பட்டு இருக்கிறது. குளிர்ச்சி தன்மை மிகுந்ததாக திகழக்கூடிய வெண்பூசணியை சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும் சளி அடிக்கடி பிடிக்கும் என்று கூறுபவர்களும் சற்று கவனத்துடன் சாப்பிட வேண்டும். சரி இப்பொழுது வெண்பூசணியை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். - Advertisement - வெண்பூசணியின் சதைப்பகுதியை தான் நாம் பொதுவாக அரைத்து சாறெடுத்து குடிப்போம். ஆனால் வெண்பூசணியின் விதைகளிலும் நமக்கு பல நன்மைகள் இருக்கிறது. அதனால் சாறு எடுக்கும் பொழுது வெண்பூசணியில் இருக்கக்கூடிய க

முடி வளர்ச்சியை தூண்டும் மோர் | Mudi varachiyai thoondum moor

படம்
[ad_1] - Advertisement - முடி பராமரிப்பை நாம் மேற்கொள்வதற்கு தலைக்கு எண்ணெய் எப்படி தயார் செய்வது என்றும், அதேசமயம் ஹேர் பேக் எப்படி போடுவது என்றும், எந்தெந்த பொருட்களை பயன்படுத்தினால் நம்முடைய முடி ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பல பதிவுகளை நாம் பார்த்திருப்போம். இப்படி இவை அனைத்தையும் மேற்கொண்டாலும் ஒரு சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை என்பது நிற்கவே நிற்காது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் நிறைந்த பொருட்களை உட்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முறை பற்றி தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். ஒருவருக்கு முடி உதிர்தல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் முக்கியமான காரணமாக திகழ்வது உடலில் இருக்கக்கூடிய சத்துக் குறைபாடு தான். முடி உதிர்தல் ஆக இருந்தாலும் முதலில் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் தான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்புற பராமரிப்பை செய்தாலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பொருட்களையும் உண்ண வேண்டும். - Advertisem

சுரைக்காய் பயன்கள் | Bottle gourd health benefits in tamil

படம்
[ad_1] - Advertisement - இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பல உணவுப் பொருட்களை நம் முறையாக உட்கொண்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கை என்பது ஆரோக்கியமான வாழ்க்கையாக அமையும். அதை தவிர்த்ததால் தான் இன்றைய காலத்தில் அதிக அளவு நோய்வாய்ப்பட்டு இருக்கிறோம். அனைவரின் இல்லங்களிலும் யாராவது ஒருவராவது தொடர்ச்சியாக மருந்து உண்ணும் நிலைக்கு தான் ஆளாகி இருக்கிறார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று எவ்வளவு பேசினாலும் இன்றைய சூழ்நிலையில் நோய்களுடன் வாழ்பவர்கள் தான் பலர். அப்படி நமக்கு ஏற்படக்கூடிய பல நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற கூடிய ஒரு அற்புதமான காயாக திகழக்கூடியது தான் சுரைக்காய். இந்த சுரைக்காயை நாம் எப்படி எல்லாம் சாப்பிட்டால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். சுரைக்காய் என்பது வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. இது வெயில் காலத்திற்கு சிறந்த காயாக கருதப்படுகிறது. காரணம் இதில் 96 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. இதை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடல் குளிர்ச்சியாக புத்துணர்ச்சியாகவும் திகழும். சுரைக

ஏபிசி ஜூஸ் செய்வது எப்படி | ABC juice for skin whitening in Tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் எடை குறைப்பது முதல் முகம் தங்கம் போல தகதகன்னு மின்னுவது வரை எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நல்ல பலன்களை அளிக்கக்கூடிய இந்த ஜூஸுக்கு இன்று தனி மவுசு தான்! காலை உணவிற்கு பதிலாக இந்த ஜூஸை எடுத்துக் கொண்டாலே தேவையான மொத்த சத்தும் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அப்படியான இந்த ஜூஸ் என்ன ஜூஸ்? இதை எப்படி தயாரித்து பருகுவது? என்பதைத்தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். உடலுக்கு பல்வேறு நல்ல சத்துக்களை அளிக்கக்கூடிய முக்கியமான மூன்று பொருட்களை உள்ளடக்கிய இந்த ஜூஸுக்கு ‘ஏபிசி ஜூஸ்’ என்கிற பெயர் உண்டு. ஏ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பீட்ரூட், சி ஃபார் கேரட் என்பதைத்தான் இந்த ஏ பி சி குறிக்கிறது. இது புற்றுநோய், இதய நோய், முகப்பொலிவு, எடை குறைப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக காலை உணவிற்கு பதிலாக எடுத்துக் கொள்கின்றனர். - Advertisement - காலையில் வெறும் வயிற்றில் எழுந்ததும் இந்த ஜூஸை பருகலாம் அல்லது மதிய நேர உணவிற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் இதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக

தலைவலி நீங்க வைத்தியம் | Thalai vali home remedies in Tamil

படம்
[ad_1] - Advertisement - தலைவலி என்பது எப்பொழுது வரும் என்றே தெரியாத ஒரு விஷயமாக இருக்கும். அது வந்து விட்டால் அவ்வளவு சீக்கிரம் போய்விடவும் செய்யாது. உடம்பில் டீஹைட்ரேஷன் எனப்படும் நீர் சத்து குறைவதாலும் தலைவலி வருகிறது. மருந்து, மாத்திரைகளை போடாமல் இதை செய்து பாருங்க தலைவலி பறந்தே ஓடும். பல்வேறு காரணங்களால் வரக் கூடிய இந்த தலைவலி உடனே தீர வீட்டில் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம். தலைவலி தீருவதற்கு முதலில் தண்ணீர் பருக வேண்டும். உடம்பில் நீர் சத்து குறைவதால் தலைவலி உண்டாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. குடிக்கும் தண்ணீரை ஒரேயடியாக மடக்கு மடக்கு என்று குடிக்காமல் வாயில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக சிப் செய்து குடிக்க வேண்டும். தீராத தலைவலி தீருவதற்கு இந்த முறையை செய்து பாருங்கள் சட்டென்று வலி குறைந்து போவதை உணரலாம். - Advertisement - தீராத ஒற்றை தலைவலி அல்லது கடுமையான தலைவலி உடனே நிவாரணம் காண்பதற்கு ஒரு கிராம்பை எடுத்து அடுப்பில் காண்பித்து சூடு செய்து கொள்ளுங்கள். சற்று ஆறியதும் ஒரு துணியில் மடித்து அ

சமையலறையில் இருக்கக்கூடாதவை | Samayal araiyil irukka kudathavai Tamil

படம்
[ad_1] - Advertisement - எப்பொழுதும் சமையல் அறையில் இருந்து தான் நம்முடைய ஆரோக்கியம் துவங்குகிறது. முக்கியமாக ஆரோக்கியமான மனிதனாக இருக்க நம்முடைய சமையல் அறையை எப்படி வைத்திருக்கிறோம்? என்பதை பொறுத்து தான் இருக்கிறது. இத்தகைய சமையலில் நம் உண்ணும் உணவில் தவிர்க்க வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் உண்டு. அவை யாவன? சமையலறையில் இருக்க வேண்டாத பொருட்கள் என்னெல்லாம்? என்பதைத் தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். காலை உணவில் பெரும்பாலும் தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் சர்க்கரை! வெள்ளை சர்க்கரை உடலுக்கு கெடுதி. இதை காலை உணவில் நீங்கள் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. சர்க்கரை சேர்க்கப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் காலை உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக ஜாம் போன்ற பொருட்களில் இருக்கக்கூடிய சர்க்கரை நம் உடலை மந்தமாக்குகிறது. சர்க்கரை சேர்க்கப்பட்ட இந்த செயற்கை பழக்கூழ் நம் கிச்சனில் இல்லாமல் இருந்தால் நல்லது தான். - Advertisement - இரண்டாவதாக நீண்ட நாட்கள் பதப்படுத்த வேண்டிய சாஸ் போன்ற பொருட்களும் நம் கிச்சனில் இல்லாததே நல்லத

தலை முதல் பாதம் வரை ஆரோக்கியம் தரும் இலை.

படம்
[ad_1] - Advertisement - ஒருவர் வசதி வாய்ப்புடன் வாழ்ந்தாலும் அவருடைய உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த வசதி வாய்ப்பை அவரால் அனுபவிக்க முடியும். அப்படிப்பட்ட உடல் ஆரோக்கியத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் அல்லவா? இதற்காக மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. எந்த ஒரு இலையை தினமும் காலையில் நம் உட்கொண்டு வந்தால் நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும் என்றுதான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். இயற்கை அன்னை நமக்கு பல அறிய மூலிகைகளை வழங்கி இருக்கிறது. அதிலும் பல மூலிகைகள் நம் அருகிலேயே நமக்கு தினமும் கிடைக்கக்கூடிய வகையில் இருக்கிறது. அதை உணராமல் வீணாக்குவது தான் மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. அப்படி நாம் வீணாக்கும் ஒரு அறிய அற்புதமான மூலிகைதான் கருவேப்பிலை. - Advertisement - கருவேப்பிலையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. இந்த சத்துக்களால் நம் தலை முதல் பாதம் வரை இருக்கக்கூடிய அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது கருவேப்பிலையை எப்படி சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். தினமும் காலையில் 15 கருவேப்பிலையை நன்றாக கழ

சாதம் வடித்த கஞ்சியின் பயன்கள் | Satham vaditha kanjin payangal

படம்
[ad_1] - Advertisement - இன்றைய அவசர உலகத்தில் பலரும் தங்களுடைய நேரத்தை மிச்சம் செய்ய வேண்டும், வேலையை சுலபமாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சாதத்தை குக்கரில் வைத்து சமைத்து விடுகிறார்கள். அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது என்று தெரிந்தாலும் அந்த தவறையே செய்கிறார்கள். அதை தவிர்த்து விட்டு சாதத்தை நாம் பானையில் வடித்து சாப்பிடுவதால் நமக்கு பல ஆரோக்கியம் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வடித்த அந்த கஞ்சியும் நம் உடலின் பல ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் வடிகஞ்சி நம்முடைய உடலுக்கு எந்த அளவுக்கு நன்மையை தருகிறது என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம். அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் காலையில் எழுந்ததும் நீராகாரம் என்று ஒன்றை குடிப்பார்கள். அதுதான் அவர்களின் ஆரோக்கியமான காலை பானமாக திகழ்ந்தது. இன்றைய காலத்தில் நாமும் நம் குழந்தைகளும் அருந்தக்கூடிய பூஸ்ட் போன்விடா ஹார்லிக்ஸ் என்று இருக்கக்கூடிய எந்த பானமும் இந்த நீராகாரத்திற்கு இணை ஆகாது என்று தான் கூற வேண்டும். அவ்வளவு அற்புதமான ஆற்றல் மிகுந்ததாக தான் இந்த நீராகாரம் இருந்தது. - A