இடுகைகள்

kariya vetri tharum valipadu லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெற்றியைத் தரும் முருகன் வழிபாடு | Vetriyai tharum murugan valipadu

படம்
[ad_1] - Advertisement - கலியுக தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானிடம் நாம் எந்த கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கையை அவர் உடனே நிறைவேற்றி தருவார் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முழுமனதோடு நாம் வேண்டக்கூடிய ஒவ்வொரு வேண்டுதலும் முருகப்பெருமானின் அருளால் நடந்தேறும் என்று தான் கூற வேண்டும். நம்முடைய பக்தி உண்மையாக இருக்கிறதா என்பதற்காக சோதனை வைத்தாலும் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவராகவே முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் வெற்றிகள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகப்பெருமானை வழிபடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானை சரணாகதி அடைந்து வேலுண்டு வினையில்லை என்ற கூற்றுக்கு இணங்க அவரையும் அவர் கையில் இருக்கக்கூடிய வேலையும் மனதார நினைத்துக் கொண்டு நாம் மேற்கொள்ளும் வழிப்பாடானது நமக்கு வெற்றிகளை குவித்து தரும்