பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்: Nakshatra Thevaram Songs
[ad_1]
Thevaram Songs for the Birthday Star in Tamil தம் பிறந்த நட்சத்திரத்தின் பாடலை தினமும் மூன்று முறை பாடிக் கொண்டு சிவபெருமானை வழிபடுவோர், நவக்கிரக தோஷங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வைப் பெறுவர். அசுவினி தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து உந்தன் சரண் புகுந்தேன்எக்கால் எப்பயன் நின் திறம் அல்லால் எனக்கு உளதேமிக்கார் தில்லையுள் விருப்பா மிக வடமேரு என்னும்திக்கா! திருச்சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே. பரணி கரும்பினும் இனியான் தன்னைக் காய்கதிர்ச் சோதியானைஇருங்கடல் அமுதம் தன்னை இறப்பொடு பிறப்பு இலானைப்பெரும்பொருள் கிளவியானைப் பெருந்தவ முனிவர் ஏத்தும்அரும்பொனை நினைந்த நெஞ்சம் அழகிதாம் நினைந்தவாறே. கார்த்திகை/கிருத்திகை செல்வியைப் பாகம் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றை சூடிக்கல்வியைக் கரை இலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளார்எல்லிய விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே. ரோகிணி எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்அங்கே வந்து என்னோடும் உடன் ஆகி நின்றருளிஇங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்கங்கா நாயகனே கழிப்பாலை மேயோனே. மிருக சீரிட...