இடுகைகள்

சலல லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒரு குடும்பம் சிறப்பாக இருக்கிறது என்றால் அதற்கு கணவன் மனைவி என்ற இரண்டு நபர்கள் வேண்டும். அந்த சக்கரங்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பம் என்னும் வண்டி நன்றாக ஓடும். இதில் ஏதாவது ஒன்றில் கூட பிரச்சினை இருந்தாலும் அந்த வண்டி ஓடுவது மிகவும் சிரமமாகிவிடும். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றால்தான் அந்த குடும்பம் குடும்பமாக இருக்கும். இல்லையேல் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும். அப்படி கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த அனுசரித்து செல்வதற்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். தம்பதிகள் ஒற்றுமை அதிகரிக்க சொல்ல வேண்டிய மந்திரம் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதற்கும் நம்முடைய தெய்வங்களை சான்றாக விளங்குகின்றன. சிவபெருமான் தன்னில் சரிபாதியாக பார்வதிக்கு இடம் கொடுத்தார். அதேபோல் மகாவிஷ்ணுவோ தன் மார்பில் மகாலட்சுமிக்கு இடம் கொடுத்திருக்கிறார். அப்படி கணவனுக்கும் மனைவிக்கும் கருத்து

நினைத்த காரியம் நிறைவேற ஆடி மாதம் சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - தட்சன்ய புண்ணிய காலம் என்று கூறக்கூடிய காலமானது ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கக்கூடிய காலமாகும். இந்த காலத்தில் தான் அதிக அளவில் தெய்வ வழிபாடு இருக்கும். ஆடி மாதத்தில் அம்மனின் வழிபாடும், பிறகு கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம், மார்கழி மாதம் என்று நாம் பல வழிபாடுகளை மேற்கொள்வோம். அந்த அளவிற்கு வழிபாட்டிற்கு உகந்த காலமான இந்த காலத்தின் தொடக்க மாதம் என்பது ஆடி மாதமாக திகழ்கிறது. அதனால் இந்த ஆடி மாதத்தில் நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதற்குரிய பலன் நமக்கு அதிகமாகவே கிடைக்கும். அந்த வகையில் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக நாம் வழிபாடு செய்யும்பொழுது கிடைக்கும் பலனைவிட மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் கிடைக்கும் பலன் என்பது அதிகம். அதிலும் குறிப்பாக ஜபம் செய்வது என்பது மிகவும் உத்தமமான செயலாக திகழ்கிறது. மந்திரத்தையும் தெய்வத்தின் பெயரையும் ஜபம் செய்து கொண்டு இருக்கலாம். இந்த ஜெபத்திற்கு

சொந்த வீடு கட்ட சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - காக்கை குருவி கூட தனக்காக சொந்தமாக ஒரு இடத்தை தேர்வு செய்த பிறகு தான் தன் முட்டைகளை ஈன்று குஞ்சுகள் பொறிக்கும். ஆனால் மனிதனாகப் பிறந்த நாமோ சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி அதில் வீடு கட்டி நம்முடைய குடும்பத்துடன் குடியேற வேண்டும் என்று நினைத்தால் அது நினைத்த உடனே நடைபெறுவது கிடையாது. பலருக்கும் இந்த சொந்த வீடு கனவு என்பது எட்டா கனியாகவே இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்குவதற்குரிய பொருளாதார வசதி இல்லாத சூழ்நிலையால் அந்த கனவு நிறைவேறாமல் இருக்கும். இன்னும் சிலருக்கோ பொருளாதார வசதி இருந்தும் அந்த கனவை நிறைவேற்ற முடியாமல் ஏதாவது ஒரு தடைகள் வந்து கொண்டே இருக்கும். - Advertisement - இப்படி எப்பேற்பட்ட தடைகளாக இருந்தாலும் பிரச்சினையாக இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்து விரைவிலேயே சொந்த வீட்டில் குடியேறும் அமைப்பை உண்டு பண்ணும் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். சொந்த வீடு கட்ட செவ்வாய் பகவான் மந்திரம் பொதுவாக சொந்த வீடு, நிலம், வாசல் வாங்க வேண்டும் என்றால் நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பலமாக

கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - இன்றைய பல குடும்பங்களில் தலைவிரித்தாடும் மிகப் பெரிய பிரச்சனை எனில் அது கடன் தொல்லையாக தான் இருக்கும். ஏனெனில் மற்ற பிரச்சனைகள் அனைத்தும் இந்த கடனை தொடர்ந்து தான் வந்து கொண்டிருக்கும். கடன் என்ற ஒன்று இல்லை என்றாலே இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் நிம்மதியான வாழ்க்கையை வாழலாம் என்பது மட்டும் உறுதி. ஆனால் அப்படி வாழ்வதற்கான சாத்திய கூறுகள் மிகவும் குறைவு. அதையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். சரி ஏதோ ஒரு சூழ்நிலையில் கடன் வாங்கி விட்டோம் அதை இப்பொழுது அடைக்க முடியாமல் துன்பப் படுகிறோம் அதற்கு என்ன செய்வது என்று கேட்கிறார்களா? இதோ ஒரு அற்புதமான மந்திர வழிபாட்டு முறை உள்ளது. - Advertisement - இதை தொடர்ந்து செய்யும் போது கடன் அடைவதற்கான வாய்ப்பு பெருகும் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திர வழிபாட்டை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் மந்திரம் குறித்த இந்த பதிவில் நான் தெரிந்து கொள்ளலாம். கடன் அடைய சொல்ல வேண்டிய மந்திரம் இந்த மந்திர வழிபாட்டை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். இதை துவங்கும் நாளன்று அதிகாலை நேரத்தில் எழுந்

தீராத கொடிய நொய்கல் விளாகா செல்ல வேண்டிய கோவில்கள் | தீராத கொடிய நொய்கள் விலக செல்ல வேண்டிய கோவில்

[ad_1] தீராத கொடிய நொய்கல் விளாகா செல்ல வேண்டிய கோவில்கள் | தீராத கொடிய நொய்கள் விலக செல்ல வேண்டிய கோவில் [ad_2] https://nithyasubam.in/?p=1706

தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - முருகர் வழிபாட்டிற்கு உகந்த அதி முக்கிய நாளாக கருதப்படுவது சஷ்டி. இந்த சஷ்டி தினத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் பொழுது அவருடைய அருளை பரிபூரணமாக பெறலாம். சஷ்டியானது மாதத்தில் இரண்டு முறை வரும் ஒன்று வளர்பிறை சஷ்டி மற்றொன்று தேய்பிறை சஷ்டி. அப்படி அதி முக்கியமான நாளில் முருகனின் அருளை பெற்று வளமுடன் வாழக் கூடிய ஒரு சூட்சம மந்திரத்தை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். சகல சௌபாக்கியத்தையும் தரும் சஷ்டி வழிபாடு இன்றைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் செய்யலாம் இல்லாதவர்கள் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் சொன்னாலும் போதும். முதலில் சஷ்டி தினத்தில் முருகருக்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையைப் பற்றி பார்க்கலாம். இந்த வழிபாட்டை மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 9:00 மணிக்குள்ளாக செய்தால் போதும். - Advertisement - இதற்கு முருகர் படத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து விடுங்கள். நல்ல மனம் மிக்க பூக்களை சாற்றுங்கள். வேல் சிலை இருந்தால் அதற்கு அபிஷேகம், வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. அத்துடன் முருகருக்கு

வாழ்க்கையில் வெற்றி பெற சொல்ல வேண்டிய அம்மன் மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தினம் தினம் போராடுவதும் துன்பப்படுவதும் நம்முடைய இலக்கை அடைய வேண்டும் என்று தான். இந்த இலக்கு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு சிலருக்கு பிள்ளைகளின் படிப்பு, திருமணம், வீடு கட்டுவது, சொந்தத் தொழில் தொடங்குவது இப்படி அவரவருக்கு ஏற்ற வகையில் இந்த இலக்கு மாறுபடும். எப்படி இருப்பினும் எல்லோரும் ஏதோ ஒரு காரியத்திற்காகவும் அதை நிறைவேற்றுவதற்காகவும் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய உழைப்பையும் முயற்சியும் சேர்த்து இந்த மந்திரத்தை ஜெபித்தால் நிச்சயம் அதற்கான பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். - Advertisement - வாழ்க்கையில் வெற்றி பெற மந்திரம் மாதங்களில் பல மாதங்கள் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அதில் பல விசேஷங்கள் வழிபாடுகள் போன்றவை வரும். அந்த வகையில் இந்த ஏப்ரல் மாதம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நாம் அன்னையை நினைத்து சொல்லக் கூடிய ஒரு மந்திரம் நம் வாழ்க்கையை மாற்றி வ