இடுகைகள்

Perceived லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிருகு உணர்ந்த உண்மை - Sage Bhrigu Perceived Truth in Tamil

படம்
[ad_1] Sage Bhrigu Perceived Truth ப்ரிகு உணர்ந்த உண்மை நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) நாம் யார்? நம்மைப் படைத்தவன் யார்? நம்முடைய உண்மை இயல்பு என்பது என்ன? நம் கண் எதிரே நாம் காணும் உலகம் என்பது என்ன? வேதங்கள் கூறும் தெய்வீகத்தை உணருவது எப்படி? தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்தக் கேள்விகளைக் கேட்காத நபர்கள் வெகு குறைவு. முன்னொரு காலத்தில் பிருகு என்கிற மாணவனும் இந்தக் கேள்விகளைக் கேட்டதோடு அல்லாமல் கேள்விகளுக்கான பதிலையும் முனைப்புடன் தேடினான். கேள்விகளையும் பதிலையும் முழுமையாக உணர்ந்து தெளிந்தபோது, இந்த உலகமே அவனை அறிந்தது. குருகுல கல்வியில் தேர்ச்சி பெற்று, அடிப்படை கேள்விகளுக்கு விடை தேடி அலைந்தபோது, தன் தந்தையும், குருவுமான வருணமுனியை அணுகி தனக்கு உதவி செய்ய வேண்டினான். ஆர்வமுடன் ஆன்மீகத் தேடலை மேற்கொண்டுள்ள தன் மகனுக்கு முதலில் மனித உடல், உள்ளம், எண்ணம், புத்தி ஆகியவைகளுக்கு அடிப்படையாக விளங்கும் ‘ஐந்து கோச விவேக’ தத்துவ நிலைகளை விளக்கினார் குரு. (கோசம் என்பது கூடு). ஐந்து புலன்கள் அடங்கிய உடல் அன்னத்தால் ஆனது. இது அன்...