கோகுலாஷ்டமி/கிருஷ்ண ஜெயந்தி: Gokulashtami/Krishna Jayanthi
[ad_1]
பரித்ராணாய சாதுனாம் வினாஷாய ச துஷ்க்ரிதம்தர்ம-ஸன்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே பகவான் கிருஷ்ணர் “எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக” என்பது கீதாசாரம். கோகுலாஷ்டமி [கிருஷ்ண ஜெயந்தி] வரலாறு கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து விளக்கம் கீழே விவரித்துள்ளோம்: Gokulashtami History in Tamil ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்று கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள். Krishna Jayanthi History in Tamil இன்னொன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகும். பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண...