இடுகைகள்

recipe லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரக குழம்பு செய்முறை | Seeraga kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டி தான் அன்றைய காலத்தில் மருந்தகமாக செயல்பட்டது. நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் உடனே சமையலறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பொருட்களை தான் கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களால் அந்த காலத்தில் அவ்வளவு ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய காலத்தில ஒரு சிறிய உடல்நிலை பாதிப்பாக இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிக்கு போய் அங்கு கொடுக்கக்கூடிய மருந்துகளையும் ஊசிகளையும் போட்டு நம்முடைய இயற்கையான உடல் அமைப்பையே நாம் மாற்றி விடுகிறோம். அந்த வகையில் நம்முடைய வீட்டில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது தான் சீரகம். சீரகம் என்றாலே நம்முடைய அகத்தை சீராக்கக் கூடியது என்று அர்த்தம். நம்முடைய உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் சீராக அதாவது சரியாக செயலாற்ற வேண்டும் என்றால் அது சீரகத்தால் மட்டுமே முடியும். அதனால்தான் நம்முடைய சமையலில் நாம் சீரகத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது ரசம் வைத்து கொடுப்பதற்கு காரணமும் அதுதான். மேலும் அஜீரண கோளாறு நீக்க

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சி

முளைகட்டிய பயறு அடை செய்முறை | Mulaikattiya payaru adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் இருக்கும் பலருக்கும் சத்துக் குறைபாடு என்பது அதிக அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பது தான். அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் அவர்களுடைய உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இப்படி அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் சீராக இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவையான அளவு சத்துக்கள் கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான சத்துதான் புரத சத்து. இந்த புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடியது பயறு வகைகளில் தான். அதிலும் குறிப்பாக முளைகட்டிய பயறு வகைகளில் அதிக அளவில் புரத சக்தி இருக்கிறது. முளைகட்டிய பயிறு வகைகளை எந்த வடிவில் நாம் செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அந்த முளைகட்டிய பயறை வைத்து அடை தோசை செய்து தரும் பொழுது அதை என்னவென்று தெரியாமலேயே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அடை தோசை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Adver

மஸ்ரூம் சுக்கா செய்முறை | Mushroom chukka recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நாம் உண்ணும் உணவானது ஆரோக்கியம் மிகுந்த உணவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாமும் ஆரோக்கியமாக இருப்போம். அப்படி ஆரோக்கியமான உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்து கொடுத்தோம் என்றால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவில் ஒன்றாக திகழ்வதுதான் காளான். காளானை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு காளான் சுக்காவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். காளானில் செலினியம் என்னும் ரசாயன மூலக்கூறு அதிகம் இருக்கிறது. இது எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் பற்கள், நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆண்களுக்கு இருக்கக்கூடிய மலட்டுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது. அடுத்ததாக இதில் இரும்பு மற்றும் செம்பு சத்து உடல் வலுவாவதற்கும், காயங்கள் வேகமாக ஆறுவதற்கும் உதவுகிறது. மேலும் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடல் எடையை குறைப்பதற்

நேந்திர பழ ஜாமுன் செய்முறை | Nendra pazha jamun recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - கேரளாவில் அதிகளவில் கிடைக்கக்கூடிய நேந்திரம் பழத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். ரத்த சோகை பிரச்சினை வராமல் தவிர்க்கப்படும். மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவாகும். நரம்பு தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நல்ல தூக்கத்தையும் ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு மருத்துவ குணம் மிகுந்த நேந்திரம் பழத்தை வைத்து நாம் நம்முடைய வீட்டில் இனிப்பு வகைகளை செய்து தரலாம். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத்தை வைத்து ஜாமூன் செய்து தரும் பொழுது யாருமே வேண்டாம் என்று கூறவே மாட்டார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நேந்திரம் பழத்தை வைத்து எப்படி நேந்திரம் பழ ஜாமூன் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தண்ணீர் – 1/2 டம்ளர் சர்க்கரை – 500 கிராம் குங்குமப்பூ – ஒரு கிராம் ஏலக்காய் – 2 சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை நேந்திரம் பழம் – 2 நெய் பொ

பயணத் துவையல் செய்முறை | travel time thuvaiyal recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக நாம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக பயணத்தை மேற்கொள்ளும் பொழுது வீட்டிலேயே உணவு வகைகளை தயார் செய்து எடுத்துச் செல்வோம். இவ்வாறு நாம் தயார் செய்து எடுத்துச் செல்லும் பொழுது பெரும்பாலும் இட்லி, சப்பாத்தி எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் என்று எடுத்துச் செல்வோம். அப்பொழுதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்காக. அந்த சமயத்தில் இதற்கு தொட்டுக் கொள்வதற்காக சட்னி தயார் செய்வோம். இந்த சட்னியை சற்று பக்குவமாக தயார் செய்யாவிட்டால் அது விரைவிலேயே கெட்டுப் போய்விடும். இதற்காக பலரும் புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி என்று சேர்த்து புதினா துவையலை செய்து எடுத்து வருவார்கள். இதற்கான மெனக்கெடு என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கக்கூடிய தேங்காயை வைத்து எளிமையான முறையில் இந்த துவையலை செய்தோம் என்றால் மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துவதாக இருந்தால் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் உபயோகப்படுத்தலாம். மேலும் இந்த பொருட்களை பொடியாக அரைத்து வைத்துக் கொண்ட

ராஜ்மா மசாலா செய்முறை | Rajma masala recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வட இந்தியர்கள் அதிக அளவில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய தானிய வகைகள் பல இருக்கின்றன. அவர்கள் அதிகப்படியான உணவான சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வதற்காக செய்யக்கூடிய டால் வகைகள் என்பது பல இருக்கின்றன. அப்படிப்பட்ட டால் வகைகளில் ஒன்று தான் ராஜ்மா டால், ராஜ்மாவை வைத்து இந்த முறையில் மசாலா செய்யும் பொழுது சப்பாத்தி, தோசை, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். சைவ உணவில் அதிக அளவு புரதச்சத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் ராஜ்மாவை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும். இதில் கொழுப்புகள் குறைவாக இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து ஆகிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ராஜ்மாவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். செரிமானம் சீராகும

கல்யாண வீட்டு கேசரி செய்முறை | Kalyana veetu kesari recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய தமிழர்கள் பண்பாட்டில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்றால் உடனே ஏதாவது ஒரு இனிப்பை செய்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தரும் பழக்கம் இருக்கும். அதே போல் ஏதாவது ஒரு விசேஷமான நாளாக இருக்கும் பொழுதும் வீட்டில் எளிதில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளை செய்து வைத்து பூஜை செய்யும் முறையும் இருக்கும். அப்படி செய்யக்கூடிய இனிப்பு பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் கேசரி. விரைவிலேயே செய்து முடிக்கக்கூடிய கேசரியை எப்படி செய்தாலும் கல்யாண வீட்டில் சாப்பிடக்கூடிய கேசரி அளவிற்கு இல்லை என்பவர்கள் இந்த முறையில் கேசரி செய்தால் அல்வா போல தொட்டாலும் கையில் ஒட்டாமல் சுவையாக இருக்கும். திடீரென்று வீட்டிற்கு விருந்தாடி வந்து விட்டார்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவுமே இல்லை என்று நினைக்கும் பொழுது நமக்கு ஆபத் பாண்டவனாக உதவக்கூடியது இந்த கேசரி தான். இந்த கேசரியை கல்யாண வீட்டு கேசரியாக சுவை மிகுந்ததாக மாற்றுவதற்கு எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட

மொச்சை பருப்பு சாதம் செய்முறை | Mochai paruppu sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட புரதச்சத்து தானிய வகைகளில் பருப்பு வகைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. அப்படி அதிக அளவில் கிடைக்கக்கூடிய பருப்பு வகைகளை வைத்து நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சாதம் செய்து தருவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள். அந்த வகையில் தான் இன்று நாம் மொச்சை பருப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு சாதத்தைப் பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். மொச்சை கொட்டையில் நம்முடைய உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் மினரல் போன்றவை இருக்கிறது. மேலும் இதில் விட்டமின் இ அதிக அளவில் இருக்கிறது. மொச்சைக்கொட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறையும். மேலும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை சரியாகும். மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது. உடலில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு மொச்சைக்கொட்டை உதவுகிறது. பெருங்குடல் புற்றுநோய் மற

தேங்காய் மாங்காய் சாதம் செய்முறை | Thengai mangai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் மதிய நேரத்தில் எப்போதும் போல் சாதம் குழம்பு காய்கறி என்று செய்து தருவதற்கு பதிலாக கலவை சாதத்தை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கலவை சாதம் எப்பொழுதும் செய்வது போல் புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் என்று செய்யாமல் மங்களூரில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சாதத்தை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த சாதத்தின் பெயர் தான் தேங்காய் மாங்காய் சாதம். இந்த சாதத்திற்கு தொக்கு ஒருமுறை செய்துவிட்டால் போதும். நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சாதத்தில் கலந்து சாப்பிட்டு விடலாம். அந்த அளவிற்கு சுவையாகவும், அதேசமயம் பல நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இந்த தொக்கு திகழ்கிறது. இதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 7 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 காஷ்மீரி மிளகாய் – 4 சீரகம் – ஒரு டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வெள்ளை எள் -1

காராபூந்தி குருமா செய்முறை | Kaara boonthi kuruma recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக நம்முடைய உணவு வகைகளில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு பெரிய பங்கு இருக்கிறது. தினமும் இவற்றில் ஏதாவது ஒன்றை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொண்டு தான் வருகிறோம். அப்படி ஏதாவது ஒன்றை செய்யும்பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்காக ஏதாவது ஒரு சட்னி வகையையோ அல்லது குருமா வகை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். சட்னியாக இருந்தாலும் குருமாவாக இருந்தாலும் எப்பொழுதும் ஒரே மாதிரி செய்தோம் என்றால் அது போர் அடித்து விடும். செய்கின்ற நமக்கு ஒரு வித வெறுப்பு ஏற்பட்டுவிடும். அதை தவிர்த்து எளிமையான முறையில் சற்று வித்தியாசமாக அதே சமயம் சுவையில் அற்புதமாக இருக்கக்கூடிய ஏதாவது ஒன்றை நடுவில் மாற்றி மாற்றி செய்தால்தான் சமைக்கிற நமக்கும் திருப்தியாக இருக்கும், சாப்பிடுபவர்களுக்கும் விருப்பமாக இருக்கும். அப்படி அருமையான சுவையில் வித்தியாசமாக செய்யக்கூடிய காராபூந்தி குருமாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் காராபூந்தி – 150 கிராம் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன

கொள்ளு துவையல் செய்யும் முறை | Kollu thuvaiyal recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய நன்மைகளை தரக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கும். நோய்கள் நீங்குவதற்கு எந்த அளவிற்கு இயற்கையான காய்கறிகள் உதவுகிறதோ அதே போல் தான் நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாற்றுவதற்கு சில பொருட்கள் உதவி செய்கின்றன. அந்த பொருட்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது கொள்ளு. இது பொதுவாக குதிரைகளுக்கு உணவாக கருதப்படுகிறது. குதிரைகள் எவ்வளவு தூரம் ஓதினாலும் களைப்பே தெரியாமல் இருப்பதற்கு காரணம் குதிரைகள் கொள்ளை சாப்பிடுவது தான். அந்த கொள்ளை நாமும் சாப்பிடும் பொழுது நமக்கும் எந்தவித உடல் சோர்வும் ஏற்படாமல் ஆரோக்கியமாக நம்மால் வாழ முடியும். மேலும் இந்த கொள்ளில் அதிக அளவு புரோட்டின்னும் நார்ச்சத்தும் இருக்கிறது. இதை உடல் எடை குறைக்க விரும்புவோர் அதிக அளவில் உண்ணா ஆரம்பிப்பார்கள். இருப்பினும் இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க கூடியது என்பதால் அதை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு மழை, குளிர் காலங்களில் சாப்பிட வேண்டும். அப்படிப்பட்ட கொள்ளை எப்படி சாப்பிட்டால் ருசியாக இருக்

கற்கண்டு சாதம் செய்முறை | Karkandu sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - மிகவும் தெய்வீக மாதமாக திகழக்கூடிய மாதம் தான் ஆடி மாதம். அதிலும் குறிப்பாக அம்மன் வழிபாடு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அம்மனை வழிபடும் பொழுது அம்மனுக்கு பிடித்த மாதிரி இருக்கக்கூடிய பொருட்களை வைத்து வழிபாடு செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஆடி மாதம் செய்யக்கூடிய பிரசாதத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆடி மாதத்தில் எப்படி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு விசேஷமும் அதேபோல் ஆடி பௌர்ணமியும் விசேஷம்தான். அப்படிப்பட்ட ஆடி பௌர்ணமி அன்று மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாருக்கு கற்கண்டு பொங்கலை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த நெய்வேத்தியத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் பச்சரிசி – ஒரு கப் கற்கண்டு – ஒரு கப் பால் – ஒரு கப் தண்ணீர் – 2 கப் குங்குமப்பூ – ஒரு சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை நெய் – 3 டேபிள் ஸ்பூன் முந்திரி – 10 திராட்சை

சோள ரவா இட்லி செய்முறை | Corn Rava Idly Recipe in Tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களில் சிற்றுண்டி என்றால் முதலில் ஞாபகத்திற்கு வருவது இட்லி தோசை தான். அரிசி மாவில் செய்யப்படும் இட்லி தான் மிகவும் சுவையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட. என்ன தான் உடம்புக்கு நல்லது என்றாலும் தினமும் இதையே செய்து கொடுத்தால் சலித்து போகத் தான் செய்யும்.ஆகையால் எப்போதும் ஒரே போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக் கூடிய சோள ரவையில் ஒரு முறை இட்லி தோசை செஞ்சு கொடுத்து பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. வாங்க அந்த இட்லி எப்படி செய்யறதுன்னு இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் சோள ரவை – 1 கப்,தயிர் – 1 கப்,வெங்காயம் – 1,கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்,கடுகு – 1/2 ஸ்பூன்,உப்பு – 1/2 ஸ்பூன்,சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்,கேரட் – 1 துருவியது,வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது,பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது,கொத்தமல்லி – சிறிதளவு பொடியாக நறுக்கியது,எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன். - Advertis

முருங்கைக் கீரை குழம்பு செய்முறை | Murugai keerai kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - முருங்கைக் கீரையில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து முருங்கைக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும் என்று கூறப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய ரத்த சோகை போன்ற நோயை குணப்படுத்த உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களையும் கொண்டதாக தான் முருங்கைக்கீரை திகழ்கிறது. அப்படிப்பட்ட முருங்கைக் கீரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இந்த முறையில் குழம்பு செய்து தரலாம். இந்தக் குழம்பை வாரத்திற்கு ஒரு முறை என்ற வீதம் தொடர்ச்சியாக செய்து சாப்பிடுவதன் மூலம் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரின் ஆரோக்கியமும் மேம்படும். அப்படிப்பட்ட முருங்கை கீரை குழம்பு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை – ஒரு கப் நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் வேக வைத்த துவரம் பருப்பு – 100 கிராம் துவரம்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்ப

இன்ஸ்டன்ட் தோசை ரெசிபி | instant dosa recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - காலையிலும் மாலையிலும் ஏதாவது ஒரு டிபனை செய்து சாப்பிடுவதுதான் பலருது வீடுகளிலும் வழக்கமாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும்பொழுது ஒரு சில நேரங்களில் வீட்டில் மாவு இல்லாமல் போய்விடும். கடைக்கு சென்று மாவு வாங்கலாம் என்று நினைக்கும் பட்சத்தில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் மாவு வாங்குவதை மறந்தும் விடுவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டின் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து தோசை மாவு தயார் செய்து உடனடியாக ஊற்றி சாப்பிட முடியும். அப்படி ஊற்றும் தோசையானது ஹோட்டல் தோசை விட மிகவும் சுவையாக இருக்கும். இதற்காக நாம் பெரிதும் மெனக்கிட வேண்டியது இல்லை. மிகவும் சுலபமான முறையில் தோசை மாவு தயார் செய்து உடனடியாக தோசை ஊற்றி விடலாம். அப்படி இன்ஸ்டன்ட் தோசை செய்வதற்கு எந்த முறையில் மாவு அரைக்க வேண்டும்? எந்தெந்த பொருட்களை அதில் சேர்க்க வேண்டும் என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் அரிசி மாவு – ஒரு கப்கடலைமாவு – 1/4 கப்தயிர் – 1/2 கப்உருளைக்கிழங்கு – 1உப்பு – தேவையான அளவுபேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன

கோவக்காய் சட்னி செய்முறை | Kovakkai chutney recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வேலியோரங்களில் பரவலாக காய்க்கக்கூடிய பொருளாக திகழ்வதுதான் கோவைக்காய். அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் இந்த கோவைக்காய் பழத்தை அப்படியே எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பலருக்கும் விரும்பாத ஒரு காய்கறியாக இந்த கோவைக்காய் திகழ்கிறது. அப்படிப்பட்ட கோவைக்காயை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ஆந்திராவின் புகழ்பெற்ற கோவைக்காய் சட்னி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். கோவைக்காயில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் தடுக்கப்படுகிறது. மேலும் இதில் இரும்பு சத்து, கால்சியம், வைட்டமின் பி1, பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவைக்காய் பெரிதும் துணை புரிகிறது. உடல் பருமனை தடுத்து தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும் இது உதவுகிறது. மேலும் மலக்கட்டு, குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. உடல் சோர்வை தவிர்த்து சுறுசுறுப்பை தரக்கூடியதாகவும் இந்த கோவைக்காய் திகழ்கிறது. - Advertisement - தேவையான பொருட்கள் கோவைக்கா

பிரண்டை குழம்பு செய்முறை | Pirandai kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உணவே மருந்து என்று கூறக்கூடிய நம்முடைய பாரம்பரியத்தில் பலரும் இன்றைய காலத்தில் மருந்தை உணவாக எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை தவிப்பதற்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய ஆரோக்கியம் மிகுந்த பொருட்களை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும். அந்த வகையில் பிரண்டையை வைத்து செய்யக்கூடிய ஒரு குழம்பை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். பிரண்டையில் அதிக அளவு கால்சியம் சக்தி இருக்கிறது என்பதால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் பிரண்டையை தொடர்ச்சியாக சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் விரைவிலேயே கூடி வலுமை பெறும். இதோடு மட்டுமல்லாமல் சோர்வோடு இருப்பவர்களுக்கு பிரண்டையை தருவதன் மூலம் அவர்கள் சுறுசுறுப்பாக திகழ்வார்கள். ஞாபக சக்தி அஅதிகரிக்கும். பசியை தூண்டும். உயரத்த அழுத்தம் இருப்பவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் பிரண்டையை அடிக்கடி தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதே போல் பிரண்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது

ஆரோக்கியமான கருப்பு லட்டு செய்முறை | Black laddu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - அன்றைய காலத்தில் நம்முடைய சமையலறையே மருத்துவ அறையாகவும் திகழ்ந்தது. காரணம் நம் உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்வதற்குரிய பொருட்கள் சமையல் அறையில் தான் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் சமையல் அறையை விட மிகவும் அதிகமான அளவு மருந்து மாத்திரைகளை உணவாக எடுத்துக் கொண்டு வருகிறோம். இதனால் நமக்கு நோய்கள் நீங்குமா என்று கேட்டால் கண்டிப்பான முறையில் நீங்காது என்று தான் கூற வேண்டும். ஆனாலும் நோயை கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த மருந்துகளை நாம் உட்கொள்வதால் நமக்கு பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. இவை அனைத்தையும் நீக்குவதற்கு வருமுன் காப்போம் என்ற விதிப்படி ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிட வேண்டும். அப்படி ஆரோக்கியமான உணவுப் பொருட்களை நாம் சாப்பிட செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு செய்து கொடுக்கக் கூடிய ஒரு லட்டுவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். இந்த லட்டுவை தினமும் ஒன்று என்ற வீதம் எடுத்துக்கொண்டு வந்தா

காரைக்கால் ஸ்பெஷல் கட்டிச்சோறு செய்முறை | Karaikal special kattisoru recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - எங்காவது ஊருக்கு சென்று விட்டு வீடு திரும்புகிறோம் அன்றைய பொழுது நாம் ஏதாவது மதிய உணவிற்காக தயார் செய்ய வேண்டும் என்னும் பட்சத்தில் அந்த நேரத்தில் காய்கறிகள் எதுவுமே இருக்காது. அதுவும் குறிப்பாக தக்காளி கூட இல்லாத ஒரு சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்தவித காய்கறிகளையும் சேர்க்காமல் மிகவும் சுவையாக இருக்கக்கூடிய காரைக்காலில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகையான கட்டிச்சோரை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் தெரிந்து கொள்வோம். இந்த கட்டிச்சோரை செய்வதற்கு நமக்கு தக்காளி கூட தேவை இல்லை. இதற்கு தொட்டுக் கொள்வதற்கு அப்பளம், வடகம், சிப்ஸ், முட்டை, தயிர் பச்சடி என்று எதை வேண்டுமானாலும் நாம் வைத்துக் கொள்ளலாம். மிகவும் எளிதில் செய்யக்கூடிய இந்த கட்டிச்சோறு சுவையில் மிகவும் அருமையாக இருக்கும். - Advertisement - தேவையான பொருட்கள் அரிசி – 2 டம்ளர் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் உளுந்து – 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காயம் – ஒன்று சின்ன வெங்காயம் – 100 கிராம் பூண்டு – 15 ப