இடுகைகள்

சமையல் குறிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மொறு மொறு கோதுமை தோசை ரெசிபி

படம்
[ad_1] - Advertisement - கோதுமை தோசை என்றாலே நிறைய பேருக்கு பிடிப்பதில்லை. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவதில்லை. வெறுமனே கோதுமை தோசை சுடாமல் இந்த முறையில், இந்த அளவுகளில் நீங்கள் சுட்டுப் பாருங்கள், இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கக் கூடிய இந்த கோதுமை தோசை எப்படி செய்வது? என்பதை தொடர்ந்து இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். கோதுமை தோசை செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – ஒரு கப் அரிசி மாவு – அரை கப் ரவை – இரண்டு டேபிள் ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று கருவேப்பிலை – சிறிதளவு பச்சை மிளகாய் – ஒன்று இஞ்சி – ஒரு துண்டு சீரகம் – ஒரு டீஸ்பூன் மிளகு – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கோதுமை தோசை செய்முறை விளக்கம் ஒரு வாயகன்ற பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அரை கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கொழுக்கட்டை மாவு, பச்சரிசி மாவு எந்த மாவாக இருந்தாலும் சரி தான். இவற்றுடன் வறுத்த ரவையை இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இ

கறி சுவையில் மீல்மேக்கர் 65 எளிதான செய்முறை

படம்
[ad_1] கறி சுவையில் மீல்மேக்கர் 65 எளிதான செய்முறை [ad_2] Follow Us: https://facebook.com/nithyasubamin https://nithyasubam.in https://www.youtube.com/@nithyasubam https://nithyasubam.in/tamil/marriage/cooking-tips-tamil/%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/

பீட்ரூட் பன்னீர் பணியாரம் செய்வது எப்படி

படம்
[ad_1] - Advertisement - பணியாரம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பணியார பிரியர்கள் தான். பணியாரத்தை எப்படி கொடுத்தாலும் ரசித்து ருசித்து சாப்பிட்டு விடலாம், அதிலும் இந்த பீட்ரூட் மற்றும் பன்னீர் சேர்த்த பணியாரம் அட்டகாசமான சுவையை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. சுவையான பீட்ரூட் பன்னீர் பணியாரம் செய்வது எப்படி? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பீட்ரூட் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்: துருவிய பீட்ரூட் – அரை கப் துருவிய பன்னீர் – அரை கப் இட்லி மாவு – 2 கப் பெரிய வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 2 கருவேப்பிலை – ஒரு கொத்து மல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு நெய் அல்லது எண்ணெய் – தேவைக்கு ஏற்ப பீட்ரூட் பணியாரம் செய்முறை விளக்கம்: பீட்ரூட் பணியாரம் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் இரண்டு கப் அளவிற்கு இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேர்க

சுவையான பாலக் பன்னீர் சப்பாத்தி செய்வது எப்படி

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் அதிகம் விரும்பும் பாலக் பன்னீர் சப்பாத்தி இப்படி ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள், கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுவார்கள். விதவிதமான சப்பாத்தி வகைகளில் இந்த பாலக் சப்பாத்தி ரொம்பவே டேஸ்ட்டியாகவும், அனைவரும் விரும்பும் வகையிலும் இருக்கப் போகிறது. சுலபமாக மற்றும் வித்தியாசமான வகையில் செய்து கொடுத்து அசத்தக் கூடிய இந்த பாலக் பன்னீர் சப்பாத்தி எப்படி நாமும் வீட்டிலேயே செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பாலக் பன்னீர் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்: பாலக்கீரை – ஒரு கட்டு பச்சை மிளகாய் – ஒன்று கோதுமை மாவு – ஒன்றரை கப் உப்பு – தேவையான அளவு ஸ்டஃப் செய்ய தேவையான பொருட்கள்: பன்னீர் – தேவையான அளவு மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி – அரை ஸ்பூன் ஓமம் – அரை ஸ்பூன் பெரிய வெங்காயம் – ஒன்று கொத்தமல்லி தழை – சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு உப்பு – தேவைக்கு ஏற்ப பாலக் பன்னீர் சப்ப

ஐந்து நிமிடத்தில் பூண்டு சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக காலை நேரத்தில் அவசர அவசரமாக வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் பள்ளிக்கூடத்திற்கு செல்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு காலை மதிய உணவுகளை தயார் செய்து தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்மணிகளாக இருந்தாலும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி செய்யும் பொழுது காலை நேர டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு எதுவும் செய்ய முடியாமல் பலரும் கஷ்டப்படுவார்கள். இதனால் வீட்டில் சண்டை கூட ஏற்படலாம். ஏன் இன்னும் சில வீட்டில் குழந்தைகளும், பெரியவர்களும் ஒழுங்காக சாப்பிடாமல் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிமையாக ஐந்தே நிமிடத்தில் ஒரு சட்னியை தயார் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த சட்னி உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய சட்னியாகவும் அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய சட்னியாகவும் திகழ்கிறது. இந்த சட்னியை பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவில் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பூண்டு சட்னியை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித

ஆரோக்கியம் அள்ளித்தரும் பன்னீர் திராட்சை ஜூஸ் இப்படி போடுங்கள்

படம்
[ad_1] - Advertisement - ஆரோக்கியத்திற்கு அதிக காசு செலவு செய்ய வேண்டும் என்பது இல்லை. குறைந்த விலைப் பொருட்களில் கூட ஆரோக்கியம் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அது யாருடைய கண்களிலும் அவ்வளவு எளிதாக புலப்படுவது கிடையாது. இதெல்லாம் வாங்கி சாப்பிட்டால் தான் திடகாத்திரமாக இருப்போம் என்று ஆயிரம் ஆயிரம் ஆக செலவு செய்து கொண்டிருப்போம், ஆனால் 50 ரூபாயில் கூட ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை மறந்து விடுகிறோம். அந்த வகையில் சீப் அண்ட் பெஸ்ட் பன்னீர் திராட்சை ஜூஸ் சுவையாக எப்படி போடுவது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். பன்னீர் திராட்சை வாங்கியவுடன் அப்படியே பயன்படுத்தக் கூடாது. முந்தைய காலங்களில் எல்லாம் ரசாயன சேர்க்கை அவ்வளவாக கிடையாது. ஆனால் இப்பொழுது பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்று கண்ட கண்ட ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய ரசாயனங்களை சேர்த்து பழங்களில் கூட கலப்படம் செய்யப்படுகிறது. இந்த ரசாயனங்களால் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுகிறது என்பதால் பழங்களை வாங்கி உண்பதில் கூட மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். - Advertisement -

சுவையான உருளைக்கிழங்கு பூரி செய்யும் முறை

படம்
[ad_1] - Advertisement - பூரிக்கு உருளைக்கிழங்கை தொட்டு சாப்பிட்டு பார்த்திருப்போம், ஆனால் உருளைக்கிழங்கை சேர்த்து பூரி மாவு பிசைந்து பூரி சுட்டு சாப்பிட்டு பாருங்கள், அருமையாக இருக்கும். ஆலு பூரி எனப்படும் இந்த உருளைக்கிழங்கு பூரி எளிதாக மற்றும் சுவையாக எப்படி வீட்டிலேயே தயார் செய்வது? என்பதைத்தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம். உருளைக்கிழங்கு பூரி செய்ய தேவையான பொருட்கள்: வறுத்த ரவை – ஒரு கப் தண்ணீர் – ஒரு கப் வேக வைத்த உருளைக்கிழங்கு – ஒரு கப் கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி சீரகம் – ஒரு டீஸ்பூன் ஓமம் – ஒரு டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் – ஒன்று மஞ்சள் தூள் – கால் ஸ்பூன் கஸ்தூரி மேத்தி – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையான அளவிற்கு கோதுமை மாவு – ஒரு கப் சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு உருளைக்கிழங்கு பூரி செய்முறை விளக்கம்: உருளைக்கிழங்கு பூரி செய்வதற்கு முதலில் பவுலில் ஒரு கப் அளவிற்கு வறுத்த ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு ஒரு கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ரவையுடன் சேர்த்து கலந்து விடுங்கள். இப்ப

நாவூறும் பூண்டு கார தோசை செய்வது எப்படி?

படம்
[ad_1] - Advertisement - எப்போதும் ஒரே மாதிரியான தோசையை சுட்டு போர் அடித்து போனவர்களுக்கு, இந்த கார தோசை அசத்தலான மாற்றமான ஒரு நல்ல சுவையை நிச்சயம் கொடுக்கும். ரொம்பவே எளிதான முறையில் சட்னி தேவையில்லாத கார தோசை சுடச்சுட மொறுமொறுன்னு இப்படி சுட்டு கொடுத்து பார்த்தால் பத்து தோசை இருந்தா கூட இன்னும் வேண்டுமென்று கேட்பார்கள். சுடச்சுட கார தோசை ரெசிபி எப்படி தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம். பூண்டு கார தோசை செய்ய தேவையான பொருட்கள்: தோசை மாவு – தேவையான அளவு பூண்டு – 10 பல் வரமிளகாய் – 8 புளி – நெல்லிக்காய் அளவு உப்பு – தேவையான அளவு நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் பூண்டு கார தோசை செய்முறை விளக்கம்: பூண்டு கார தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வரமிளகாய்களை உங்கள் காரத்திற்கு ஏற்ப எடுத்து காம்பு நீக்கி சுத்தமான தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் போல மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும். ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். அதே போல சிறு நெல்லிக

ஆந்திரா ஸ்டைல் பெசரட்டு தோசை செய்முறை

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தனித்துவமான உணவு வகைகள் உண்டு. அந்த வகை பட்டியலில் ஆந்திராவில் பிரசித்தி பெற்ற இந்த பெசரட்டு தோசை சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய இந்த பெசரட்டு தோசையை அடிக்கடி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை தரும். மணக்க மணக்க மொறுமொறுன்னு பெசரட்டு தோசை எப்படி தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் இனி கற்றுக் கொள்ள இருக்கிறோம். ஆந்திரா பெசரட்டு தோசை செய்ய தேவையான பொருட்கள்: பச்சைப் பயிறு – ஒரு கப் பச்சரிசி – கால் கப் இஞ்சி – ஒரு துண்டு பச்சை மிளகாய் – இரண்டு சீரகம் – ஒரு டீஸ்பூன் கல் உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 1 பெசரட்டு உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: ரவை – அரை கப் தண்ணீர் – ஒரு கப் கடுகு – சிறிதளவு உளுந்து – அரை டீஸ்பூன் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – ஒன்று பெசரட்டு தோசை செய்முறை விளக்கம்: முதலில் பச்சைப் பயறை முந்தைய நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளுங்கள். பச்சை பயறுடன் பச்சரிசியும் சேர்த்து நன்கு அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற விடுங்கள். ஆ

பேச்சுலர்ஸ் ரெசிபி தாளிச்ச சாதம் செய்வது எப்படி?

படம்
[ad_1] - Advertisement - பேச்சிலர்ஸ் அதிகம் செய்யக் கூடிய சாத வகைகளில் இந்த தாளிச்ச சாதமும் ஒன்று! டக்கு டக்குனு குறைந்த இன்கிரிடியன்ஸ் வைத்து செய்யக் கூடிய இந்த தாளிச்ச சாதம், சுட சுட சாப்பிடும் பொழுது நாவிற்கு அவ்வளவு இனிமையாக இருக்கும். எல்லா வெரைட்டி ரைஸ்சும் தோத்து போகும் அளவிற்கு அட்டகாசமாக இருக்கக் கூடிய இந்த தாளிச்ச சாதம் செய்ய ஐந்து நிமிடம் கூட எடுக்காது. அப்பளம் வைத்து சாப்பிட்டால் கூட போதும், ரசித்து ருசித்து சாப்பிடலாம். அருமையான பேச்சுலர்ஸ் விரும்பும் தாளிச்ச சாதம் எளிதாக எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து நாம் காண இருக்கிறோம் தாளிச்ச சாதம் செய்ய தேவையான பொருட்கள்: கடலை எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் ளுந்து – ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன் கருவேப்பிலை – ஒரு கொத்து பூண்டு – நாலு பல் பச்சை மிளகாய் – ஒன்று வரமிளகாய் – 2 பெரிய வெங்காயம் – ரெண்டு தக்காளி – இரண்டு மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் கொத்தமல்லி தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு தாளிச்ச சாதம் செய்முறை விளக்கம்: தாளிச்ச சாதம் செய்வதற்கு முத

சீரக குழம்பு செய்முறை | Seeraga kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டி தான் அன்றைய காலத்தில் மருந்தகமாக செயல்பட்டது. நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் உடனே சமையலறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பொருட்களை தான் கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களால் அந்த காலத்தில் அவ்வளவு ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய காலத்தில ஒரு சிறிய உடல்நிலை பாதிப்பாக இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிக்கு போய் அங்கு கொடுக்கக்கூடிய மருந்துகளையும் ஊசிகளையும் போட்டு நம்முடைய இயற்கையான உடல் அமைப்பையே நாம் மாற்றி விடுகிறோம். அந்த வகையில் நம்முடைய வீட்டில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது தான் சீரகம். சீரகம் என்றாலே நம்முடைய அகத்தை சீராக்கக் கூடியது என்று அர்த்தம். நம்முடைய உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் சீராக அதாவது சரியாக செயலாற்ற வேண்டும் என்றால் அது சீரகத்தால் மட்டுமே முடியும். அதனால்தான் நம்முடைய சமையலில் நாம் சீரகத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது ரசம் வைத்து கொடுப்பதற்கு காரணமும் அதுதான். மேலும் அஜீரண கோளாறு நீக்க

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சி

வாழைப்பழம் பன்னீர் வைச்சு சுவையான இந்த ஸ்நாக்ஸை இன்னைக்கே செய்ங்க

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டு பழக்கம் ஆகிவிட்டது. அதை கடைகளில் வாங்கி சாப்பிடும் போது உடலுக்கு ஆரோக்கிய கேடு வருவதோடு பணமும் அதிக அளவில் செலவாகும். வீட்டில் ஏதாவது சுலபமாக செய்ய வேண்டும் என்றால் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாக இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி நீங்க தெரிஞ்சு வச்சுக்கிட்டா நினைக்கும் போதெல்லாம் சட்டுனு செய்யலாம் ரொம்ப சுவையாக இருக்கும். அந்த ஸ்நாக்ஸ் எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாமா?. தேவையான பொருட்கள் வாழைப்பழம் – 4கோதுமை மாவு – 11/2 கப்பன்னீர் – 1 கப் துருவியதுஉப்பு – 1 பின்ச்ஏலக்காய் பொடி – 1/4 ஸ்பூன்வெல்லம் – 3/4 கப்எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு - Advertisement - செய்முறை இந்த ஸ்நாக்ஸ் செய்ய முதலில் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தி கொள்ளுங்கள். அதன் பிறகு வாழைப்பழத்தை இரண்டாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து ஒரு நிமிடத்திற்குள் பொறித்து எடுத்து விடுங்கள். இப்படி வாழைப்பழத்தை பொரித்து எடுத்து செய்யும் பொழுது ஸ்நாக்ஸ் ரொம்ப சுவையாக இருக்கும்.இப்பொழுது ஒரு ப

ஆரோக்கியமான வாழைத் தண்டு சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பல நோய்களை தீர்க்கக் கூடிய அற்புதமான பொருட்களாக திகழ்கின்றன. அவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் ஒவ்வொன்றும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட சத்து மிகுந்த பொருட்களில் ஒன்றாக திகழ்வது தான் வாழைத்தண்டு. வாழைத்தண்டை வைத்து எப்படி சட்னி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருக்கிறது. இதனால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். மேலும் வாழைத்தண்டில் விட்டமின் பி6, இரும்புச்சத்து போன்றவை இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதயம் மற்றும் உடல் தசைகள் வலுப்பெறவும் உதவுகிறது. மேலும் வாழைத்தண்டை ஜூஸாக செய்து சாப்பிடும் பொழுது சிறுநீரக கற்கள் கரையும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகி

கருவேப்பிலை பூண்டு தொக்கு செய்முறை | karuveppilai pundu thokku seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை உணவில் நாம் சேர்த்து சமைத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை சாப்பிடாமல் தூக்கிப் போட்டு விடுவார்கள். அப்படி சாப்பிடாமல் தூக்கிப் போடக்கூடிய மிகவும் அற்புதமான ஒரு பொருளாக திகழ்வதுதான் கறிவேப்பிலை. கருவேப்பிலையில் பல உயிர் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தினமும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை சாப்பிடுபவர்களுக்கு அவர்களுடைய உடல் ஆரோக்கியம் என்பது சீராக இருக்கும் என்றும், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் உடலின் இருக்கக்கூடிய கழிவுகள் நீங்கும் என்றும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் குறையும் என்றும் இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் இதில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பல தரப்பிலிருந்து மருத்துவ ரீதியாக கூறப்பட்டாலும் வீட்டில் இருக்கும் பல பேர் அந்த கருவேப்பிலையை தூக்கி கீழே தான் போடுகிறார்கள். அப்படி கீழே போடக்கூடியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் கருவேப்பிலை என்று தெரியாமல் சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு கருவேப்பிலை தொக்கை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த

முளைகட்டிய பயறு அடை செய்முறை | Mulaikattiya payaru adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் இருக்கும் பலருக்கும் சத்துக் குறைபாடு என்பது அதிக அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பது தான். அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் அவர்களுடைய உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இப்படி அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் சீராக இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவையான அளவு சத்துக்கள் கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான சத்துதான் புரத சத்து. இந்த புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடியது பயறு வகைகளில் தான். அதிலும் குறிப்பாக முளைகட்டிய பயறு வகைகளில் அதிக அளவில் புரத சக்தி இருக்கிறது. முளைகட்டிய பயிறு வகைகளை எந்த வடிவில் நாம் செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அந்த முளைகட்டிய பயறை வைத்து அடை தோசை செய்து தரும் பொழுது அதை என்னவென்று தெரியாமலேயே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அடை தோசை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Adver

மஸ்ரூம் சுக்கா செய்முறை | Mushroom chukka recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நாம் உண்ணும் உணவானது ஆரோக்கியம் மிகுந்த உணவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாமும் ஆரோக்கியமாக இருப்போம். அப்படி ஆரோக்கியமான உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்து கொடுத்தோம் என்றால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவில் ஒன்றாக திகழ்வதுதான் காளான். காளானை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு காளான் சுக்காவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். காளானில் செலினியம் என்னும் ரசாயன மூலக்கூறு அதிகம் இருக்கிறது. இது எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் பற்கள், நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆண்களுக்கு இருக்கக்கூடிய மலட்டுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது. அடுத்ததாக இதில் இரும்பு மற்றும் செம்பு சத்து உடல் வலுவாவதற்கும், காயங்கள் வேகமாக ஆறுவதற்கும் உதவுகிறது. மேலும் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடல் எடையை குறைப்பதற்

பாசிப்பருப்பு பூரி குஜராத்தி கடி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி எப்பொழுதும் போல் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு வித்தியாசமான முறையில் வித்தியாசமான சுவையில் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அப்படி செய்து தரக்கூடிய பொருட்கள் ஆரோக்கியமான பொருட்களாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கக்கூடிய இல்லத்தரசிகள் ஆசைப்படுவார்கள். இதோடு மட்டுமல்லாமல் தங்களின் சமையலை பாராட்ட வேண்டும் என்பதற்காகவே பார்த்து பார்த்து செய்யும் இல்லத்தரசிகளும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த முறையில் பூரி செய்து கொடுத்துப் பாருங்கள். ஆஹா ஓஹோ என்று உங்களை புகழ ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் குஜராத்தில் செய்யக்கூடிய ஒரு எளிமையான குழம்பை பூரிக்கு தொட்டுக்கொள்ள கொடுப்பதன் மூலம் இது என்ன புதிதாக இருக்கிறது என்று கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஒருமுறை செய்து பாருங்கள். மறுபடியும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கே வந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு பாசிப்பருப்பு பூரி மற்றும் குஜராத்தி கடி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Adve

நேந்திர பழ ஜாமுன் செய்முறை | Nendra pazha jamun recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - கேரளாவில் அதிகளவில் கிடைக்கக்கூடிய நேந்திரம் பழத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். ரத்த சோகை பிரச்சினை வராமல் தவிர்க்கப்படும். மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவாகும். நரம்பு தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நல்ல தூக்கத்தையும் ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு மருத்துவ குணம் மிகுந்த நேந்திரம் பழத்தை வைத்து நாம் நம்முடைய வீட்டில் இனிப்பு வகைகளை செய்து தரலாம். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத்தை வைத்து ஜாமூன் செய்து தரும் பொழுது யாருமே வேண்டாம் என்று கூறவே மாட்டார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நேந்திரம் பழத்தை வைத்து எப்படி நேந்திரம் பழ ஜாமூன் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தண்ணீர் – 1/2 டம்ளர் சர்க்கரை – 500 கிராம் குங்குமப்பூ – ஒரு கிராம் ஏலக்காய் – 2 சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை நேந்திரம் பழம் – 2 நெய் பொ

முருங்கை கீரை உளுந்த வடை எளிமையாக செய்வது எப்படி

படம்
[ad_1] - Advertisement - வடை என்றாலே எல்லோருக்கும் ஒரு அலாதியான பிரியம் உண்டு. அதிலும் இந்த வடை என்றால் கீரையை விரும்பாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இரும்பு சத்து நிறைந்துள்ள முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. இதனால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். குறிப்பாக பெண்கள் அடிக்கடி உணவில் சேர்ப்பது ஆரோக்கியம் தரும். பொதுவாக முருங்கைக்கீரை சேர்த்து வடை செய்யும் பொழுது கடலைப்பருப்பை தான் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முருங்கைக் கீரையை வைத்து எப்படி உளுந்த வடை சுவையாக தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். - Advertisement - முருங்கைக்கீரை வடை செய்ய தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை – ஒரு கப் உளுந்து – இரண்டு கப் இஞ்சி – ஒரு துண்டு மிளகு – 1/4 ஸ்பூன் பெரிய வெங்காயம் – இரண்டு பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு முருங்கைக்கீரை வடை செய்முறை விளக்கம்: முருங்கைக்கீரை வடை செய்வதற்கு முதலில் ரெண்டு கப் அளவிற்கு முழு வெள்ளை உளுத்தம் பருப்பை நன்கு அலசி சுத்தம் செய்து போத