மொறு மொறு பாவக்காய் பக்கோடா செய்முறை
[ad_1]
- Advertisement - நம்முடைய உணவில் அறுசுவைகளும் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு சுவையிலும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கிறது. அதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. அந்த வகையில் பலரும் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளாத சுவை என்றால் அது கசப்பு சுவைதான். பொதுவாக கசப்பு சுவை என்றதும் நம் நினைவிற்கு வருவது பாவக்காய் தான். பாவக்காயை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம்முடைய உடலில் பல நன்மைகள் உண்டாகிறது என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. குறிப்பாக சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும், தேவையில்லாத கொழுப்புகளை கரைப்பதற்கும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதற்கும் பாவக்காய் உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த பாவக்காய் யாரும் விரும்பி சாப்பிடுவது கிடையாது. பலரும் மருந்தாக நினைத்து சாப்பிடுகிறார்களே தவிர்த்து ருசித்து சாப்பிடுவது கிடையாது. சிறு குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை பாகற்காயை ருசித்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த முறையில் பக்கோடா செய்து கொடுக்...