இடுகைகள்

tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு | mudi valarchiyai athigarikkum laddu in tamil

படம்
[ad_1] - Advertisement - முடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக வளர வேண்டும், முடி உதிர்தல் பிரச்சனை இருக்கக் கூடாது என்று நினைப்பவர்கள் தங்களுடைய முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு எண்ணெய் பயன்படுத்துவது, ஹேர்பாக் போடுவது, சீரம் போடுவது என்று பல விதங்களில் முயற்சிகளை செய்வார்கள். எவ்வளவு எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர், சீரம் என்று எதையோ தடவினாலும் முடி வளரவே இல்லை. மேற்கொண்டு முடி உதிர்தல் பிரச்சினை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பவர்கள் இந்த ஒரு லட்டுவை தினமும் ஒன்று என்ற விதம் சாப்பிட்டால் போதும். இந்த லட்டுவை எப்படி செய்வது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முடி வளர்ச்சியை அதிகரிக்கும் லட்டு பொதுவாக முடி வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றால் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க வேண்டும். இதை வெளிப்புறமாக நாம் செய்வதோடு மட்டுமல்லாமல் நம்முடைய உடலுக்குள்ளும் நாம் எடுத்துக் கொண்டால்தான் அதனுடைய முழு பலனையும் நம்மால் பெற முடியும். நம்முடைய உடல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் நம்முடைய முடியும் ஆரோக்கியமாக இ

பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம் | panavaravu athigarikka amman manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - இந்த உலகத்தில் பணம் இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு அடிப்படையான தேவையாக பணம் திகழ்கிறது. அதனால் தான் இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் பணத்தை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி பணத்தை சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டு இருந்தாலும் பலருக்கும் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு என்பது ஏற்படுவது இல்லை. அப்படி ஏற்படாத நபர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடனில் மாட்டிக்கொள்கிறார்கள். அப்படி கடனால் பாதிக்கப்பட்டவர்களும் பணத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் கஷ்டப்படுபவர்களும் கூற வேண்டிய ஒரு அம்மன் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். பணவரவு அதிகரிக்க அம்மன் மந்திரம் நாம் செய்யக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்றால் சரியான முயற்சிகளை விடாமல் செய்ய வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைக்க வேண்டும். அப்படி தெய்வத்தின் அருள் கிடைத்தால் மட்டுமே நாம் செய்யக்கூடிய முயற

வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம் | Vinaikalai theerkkum Vinayagar manthiram in Tamil

படம்
[ad_1] - Advertisement - ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த செப்டம்பர் மாதம் என்பது விநாயகர் பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த செப்டம்பர் மாதத்தில் தான் ஆவணி மாதம் வருகிறது. ஆவணி மாதத்தில் தான் விநாயகர் பெருமான் அவதரித்தார் என்பதால் இந்த மாதம் விநாயகர் பெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த மாதத்தில் விநாயகரின் எந்த மந்திரத்தை கூறினால் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வினைகளை தீர்க்கும் விநாயகர் மந்திரம் விநாயகப் பெருமானின் அவதாரத்தை பற்றி பலருக்கும் தெரியும். குழந்தைகள் விரும்பும் கடவுளாக திகழ்கிறார். எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தை செய்ய தொடங்குவதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபட்டு விட்டு தொடங்கினால் அந்த காரியத்தில் எந்தவித தடைகளும் ஏற்படாது என்று பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் இன்றளவும் எந்த ஒரு சுபகாரியத்தை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை ப

தங்கம் சேர விநாயகர் மந்திரம் | thangam sera vinayagar manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - தொட்ட காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக நடத்திக் கொடுக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் மிக்க தெய்வமாக விநாயகப் பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் அவதரித்த தினமாக தான் விநாயக சதுர்த்தி திகழ்கிறது. இந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாம் விநாயகர் பெருமானே கண்டிப்பான முறையில் வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது சில சூட்சமமான விஷயங்களையும் மந்திரங்களையும் உச்சரித்தோம் என்றால் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் நமக்கு உண்டாகும். இந்த மந்திரம் குறித்த பதிவில் விநாயகர் சதுர்த்தி அன்று எந்த மந்திரத்தை கூறி விநாயகபெருமானை வழிபட்டால் தங்கம் அதிக அளவில் சேரும் என்றுதான் பார்க்கப் போகிறோம். தங்கம் சேர விநாயகர் மந்திரம் தங்க நகைகள் அதிகமாக சேர வேண்டும் என்றால் வருமானம் அதிகரிக்க வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி முயற்சிகளை மேற்கொண்டாலும் அந்த முயற்சிகளில் எந்த வித தடைகளும் இல்லாமல் வெற்றிகரமாக நடக்க வேண்டும். இந்த தடைகளை நீக்கி வெற்றியை தரக்கூடிய தெய்வமாக தான் விநாயக

சீரக குழம்பு செய்முறை | Seeraga kulambu recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய அஞ்சறைப்பெட்டி தான் அன்றைய காலத்தில் மருந்தகமாக செயல்பட்டது. நம்முடைய முன்னோர்கள் உடலுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விட்டால் உடனே சமையலறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பொருட்களை தான் கொடுப்பார்கள். அதனால் தான் அவர்களால் அந்த காலத்தில் அவ்வளவு ஆரோக்கியமாக வாழ முடிந்தது. ஆனால் இன்றைய காலத்தில ஒரு சிறிய உடல்நிலை பாதிப்பாக இருந்தாலும் உடனே ஆஸ்பத்திரிக்கு போய் அங்கு கொடுக்கக்கூடிய மருந்துகளையும் ஊசிகளையும் போட்டு நம்முடைய இயற்கையான உடல் அமைப்பையே நாம் மாற்றி விடுகிறோம். அந்த வகையில் நம்முடைய வீட்டில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கக்கூடியது தான் சீரகம். சீரகம் என்றாலே நம்முடைய அகத்தை சீராக்கக் கூடியது என்று அர்த்தம். நம்முடைய உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் அனைத்தும் சீராக அதாவது சரியாக செயலாற்ற வேண்டும் என்றால் அது சீரகத்தால் மட்டுமே முடியும். அதனால்தான் நம்முடைய சமையலில் நாம் சீரகத்தை அதிக அளவில் சேர்க்கிறோம். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது ரசம் வைத்து கொடுப்பதற்கு காரணமும் அதுதான். மேலும் அஜீரண கோளாறு நீக்க

வெந்தயக் கீரை சாதம் செய்முறை | Vendhaya keerai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உடல் உஷ்ணம் ஆகிவிட்டது என்றதும் அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிட சொன்னார்கள். அதுவே இன்னும் கொஞ்சம் அதிகமாகி அதை முளைகட்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது. அப்படி முளை கட்டுவதன் மூலம் நாம் பெறக்கூடிய கீரையை தான் வெந்தயக்கீரை என்று கூறுகிறோம். இந்த வெந்தயக்கீரை உடல் உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக் கூடியதாகவும் அதேசமயம் கொழுப்பை குறைக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் வெந்தயக் கீரையை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். பிரசவ வலியை தாங்கக்கூடிய சக்தி கிடைக்கும். அதே போல் மாதவிடாய் காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய வலியையும் குறைக்க உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகை வராமலும் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், நரம்பு தளர்ச்சியை முற்றிலும் நீக்குவதற்கும் சி

கருவேப்பிலை பூண்டு தொக்கு செய்முறை | karuveppilai pundu thokku seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்களை உணவில் நாம் சேர்த்து சமைத்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை சாப்பிடாமல் தூக்கிப் போட்டு விடுவார்கள். அப்படி சாப்பிடாமல் தூக்கிப் போடக்கூடிய மிகவும் அற்புதமான ஒரு பொருளாக திகழ்வதுதான் கறிவேப்பிலை. கருவேப்பிலையில் பல உயிர் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தினமும் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையை சாப்பிடுபவர்களுக்கு அவர்களுடைய உடல் ஆரோக்கியம் என்பது சீராக இருக்கும் என்றும், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் உடலின் இருக்கக்கூடிய கழிவுகள் நீங்கும் என்றும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் குறையும் என்றும் இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் இதில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் பல தரப்பிலிருந்து மருத்துவ ரீதியாக கூறப்பட்டாலும் வீட்டில் இருக்கும் பல பேர் அந்த கருவேப்பிலையை தூக்கி கீழே தான் போடுகிறார்கள். அப்படி கீழே போடக்கூடியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் கருவேப்பிலை என்று தெரியாமல் சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு கருவேப்பிலை தொக்கை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த

முளைகட்டிய பயறு அடை செய்முறை | Mulaikattiya payaru adai recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - இன்றைய காலத்தில் இருக்கும் பலருக்கும் சத்துக் குறைபாடு என்பது அதிக அளவில் இருக்கிறது. இதற்கு காரணம் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பது தான். அதிலும் குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என்றால் அதனால் அவர்களுடைய உடல் வளர்ச்சியும், மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இப்படி அவர்களுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் சீராக இருக்க வேண்டும் என்றால், அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவையான அளவு சத்துக்கள் கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான சத்துதான் புரத சத்து. இந்த புரதச்சத்து அதிகம் இருக்கக்கூடியது பயறு வகைகளில் தான். அதிலும் குறிப்பாக முளைகட்டிய பயறு வகைகளில் அதிக அளவில் புரத சக்தி இருக்கிறது. முளைகட்டிய பயிறு வகைகளை எந்த வடிவில் நாம் செய்து கொடுத்தாலும் அதை குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் அந்த முளைகட்டிய பயறை வைத்து அடை தோசை செய்து தரும் பொழுது அதை என்னவென்று தெரியாமலேயே விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அடை தோசை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Adver

மஸ்ரூம் சுக்கா செய்முறை | Mushroom chukka recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நாம் உண்ணும் உணவானது ஆரோக்கியம் மிகுந்த உணவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாமும் ஆரோக்கியமாக இருப்போம். அப்படி ஆரோக்கியமான உணவுகளை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்து கொடுத்தோம் என்றால் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவில் ஒன்றாக திகழ்வதுதான் காளான். காளானை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் செய்யக்கூடிய ஒரு காளான் சுக்காவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். காளானில் செலினியம் என்னும் ரசாயன மூலக்கூறு அதிகம் இருக்கிறது. இது எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் பற்கள், நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆண்களுக்கு இருக்கக்கூடிய மலட்டுத்தன்மையை நீக்கவும் உதவுகிறது. அடுத்ததாக இதில் இரும்பு மற்றும் செம்பு சத்து உடல் வலுவாவதற்கும், காயங்கள் வேகமாக ஆறுவதற்கும் உதவுகிறது. மேலும் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. உடல் எடையை குறைப்பதற்

நேந்திர பழ ஜாமுன் செய்முறை | Nendra pazha jamun recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - கேரளாவில் அதிகளவில் கிடைக்கக்கூடிய நேந்திரம் பழத்தை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். ரத்த சோகை பிரச்சினை வராமல் தவிர்க்கப்படும். மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் சருமம் பொலிவாகும். நரம்பு தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நல்ல தூக்கத்தையும் ரத்த உற்பத்தியும் அதிகரிக்கும். மேலும் இது ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வளவு மருத்துவ குணம் மிகுந்த நேந்திரம் பழத்தை வைத்து நாம் நம்முடைய வீட்டில் இனிப்பு வகைகளை செய்து தரலாம். அதிலும் குறிப்பாக நேந்திரம் பழத்தை வைத்து ஜாமூன் செய்து தரும் பொழுது யாருமே வேண்டாம் என்று கூறவே மாட்டார்கள். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நேந்திரம் பழத்தை வைத்து எப்படி நேந்திரம் பழ ஜாமூன் செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தண்ணீர் – 1/2 டம்ளர் சர்க்கரை – 500 கிராம் குங்குமப்பூ – ஒரு கிராம் ஏலக்காய் – 2 சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை நேந்திரம் பழம் – 2 நெய் பொ

கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம் | kadan theerkum hanuman manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - அன்றைய காலத்திலேயே நம்முடைய அவ்வை பிராட்டி கொடிது கொடிது வறுமை கொடிது என்று கூறியிருக்கிறார். அந்த வறுமையின் காரணமாக தான் நாம் கடன் என்ற ஒன்றையே வாங்குகிறோம். இப்படி கடனை வாங்கிவிட்டு அந்த கடனை அடைப்பதற்காக மேலும் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். இதனால் வறுமையும் சரியாவது கிடையாது. கடனும் அடையப்போவது கிடையாது. இன்றைய காலத்தில் பலரும் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அதுவும் குறிப்பாக கடனற்ற வாழ்க்கை வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் கடனை வாங்கிவிட்டு அந்த கடனை அடைப்பதற்காக வட்டிக்காக அல்லது மாதாந்திர தவணைக்காக தங்களுடைய வருமானத்தை முற்றிலுமாக இழந்து விடுகிறார்கள் என்பதுதான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடன் அற்ற நிம்மதியான வாழ்க்கையை பெறுவதற்கு ஆஞ்சநேயரை நினைத்து சொல்ல கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். கடன் தீர்க்கும் ஹனுமன் மந்திரம் கடன் என்ற ஒன்று ஒருவருக்கு ஏற்படுகிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் என்பது இருக்கிறது என்று அர்த்தம். செவ்வா

பயணத் துவையல் செய்முறை | travel time thuvaiyal recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக நாம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு ஏதாவது ஒரு காரணத்திற்காக பயணத்தை மேற்கொள்ளும் பொழுது வீட்டிலேயே உணவு வகைகளை தயார் செய்து எடுத்துச் செல்வோம். இவ்வாறு நாம் தயார் செய்து எடுத்துச் செல்லும் பொழுது பெரும்பாலும் இட்லி, சப்பாத்தி எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம் என்று எடுத்துச் செல்வோம். அப்பொழுதுதான் அது கெட்டுப் போகாமல் இருக்கும் என்பதற்காக. அந்த சமயத்தில் இதற்கு தொட்டுக் கொள்வதற்காக சட்னி தயார் செய்வோம். இந்த சட்னியை சற்று பக்குவமாக தயார் செய்யாவிட்டால் அது விரைவிலேயே கெட்டுப் போய்விடும். இதற்காக பலரும் புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி என்று சேர்த்து புதினா துவையலை செய்து எடுத்து வருவார்கள். இதற்கான மெனக்கெடு என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கக்கூடிய தேங்காயை வைத்து எளிமையான முறையில் இந்த துவையலை செய்தோம் என்றால் மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துவதாக இருந்தால் பத்து நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் உபயோகப்படுத்தலாம். மேலும் இந்த பொருட்களை பொடியாக அரைத்து வைத்துக் கொண்ட

ராஜ்மா மசாலா செய்முறை | Rajma masala recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வட இந்தியர்கள் அதிக அளவில் தங்களுடைய உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய தானிய வகைகள் பல இருக்கின்றன. அவர்கள் அதிகப்படியான உணவான சப்பாத்திக்கு தொட்டுக் கொள்வதற்காக செய்யக்கூடிய டால் வகைகள் என்பது பல இருக்கின்றன. அப்படிப்பட்ட டால் வகைகளில் ஒன்று தான் ராஜ்மா டால், ராஜ்மாவை வைத்து இந்த முறையில் மசாலா செய்யும் பொழுது சப்பாத்தி, தோசை, சாதம் என்று அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ராஜ்மா மசாலாவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். சைவ உணவில் அதிக அளவு புரதச்சத்து வேண்டும் என்று நினைப்பவர்கள் ராஜ்மாவை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் என்பது அதிகரிக்கும். இதில் கொழுப்புகள் குறைவாக இருக்கிறது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து ஆகிய ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. ராஜ்மாவை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதை சாப்பிடுவதால் உடல் எடை குறைவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். செரிமானம் சீராகும

கல்யாண வீட்டு கேசரி செய்முறை | Kalyana veetu kesari recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய தமிழர்கள் பண்பாட்டில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்றால் உடனே ஏதாவது ஒரு இனிப்பை செய்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தரும் பழக்கம் இருக்கும். அதே போல் ஏதாவது ஒரு விசேஷமான நாளாக இருக்கும் பொழுதும் வீட்டில் எளிதில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளை செய்து வைத்து பூஜை செய்யும் முறையும் இருக்கும். அப்படி செய்யக்கூடிய இனிப்பு பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் கேசரி. விரைவிலேயே செய்து முடிக்கக்கூடிய கேசரியை எப்படி செய்தாலும் கல்யாண வீட்டில் சாப்பிடக்கூடிய கேசரி அளவிற்கு இல்லை என்பவர்கள் இந்த முறையில் கேசரி செய்தால் அல்வா போல தொட்டாலும் கையில் ஒட்டாமல் சுவையாக இருக்கும். திடீரென்று வீட்டிற்கு விருந்தாடி வந்து விட்டார்கள் அவர்களுக்கு கொடுப்பதற்கு எதுவுமே இல்லை என்று நினைக்கும் பொழுது நமக்கு ஆபத் பாண்டவனாக உதவக்கூடியது இந்த கேசரி தான். இந்த கேசரியை கல்யாண வீட்டு கேசரியாக சுவை மிகுந்ததாக மாற்றுவதற்கு எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட

மொச்சை பருப்பு சாதம் செய்முறை | Mochai paruppu sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட புரதச்சத்து தானிய வகைகளில் பருப்பு வகைகளில் அதிக அளவில் கிடைக்கின்றன. அப்படி அதிக அளவில் கிடைக்கக்கூடிய பருப்பு வகைகளை வைத்து நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சாதம் செய்து தருவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாக வளருவார்கள். அந்த வகையில் தான் இன்று நாம் மொச்சை பருப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு சாதத்தைப் பற்றி இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். மொச்சை கொட்டையில் நம்முடைய உடலுக்கு தேவையான அளவு புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் மினரல் போன்றவை இருக்கிறது. மேலும் இதில் விட்டமின் இ அதிக அளவில் இருக்கிறது. மொச்சைக்கொட்டையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய கொழுப்புகள் குறைகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறையும். மேலும் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனை சரியாகும். மலச்சிக்கல் வராமல் தடுக்கப்படுகிறது. உடலில் இருக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கு மொச்சைக்கொட்டை உதவுகிறது. பெருங்குடல் புற்றுநோய் மற

தேங்காய் மாங்காய் சாதம் செய்முறை | Thengai mangai sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் மதிய நேரத்தில் எப்போதும் போல் சாதம் குழம்பு காய்கறி என்று செய்து தருவதற்கு பதிலாக கலவை சாதத்தை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட கலவை சாதம் எப்பொழுதும் செய்வது போல் புளி சாதம், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம் என்று செய்யாமல் மங்களூரில் மிகவும் பிரபலமாக திகழக்கூடிய சாதத்தை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த சாதத்தின் பெயர் தான் தேங்காய் மாங்காய் சாதம். இந்த சாதத்திற்கு தொக்கு ஒருமுறை செய்துவிட்டால் போதும். நாம் நினைக்கும் பொழுதெல்லாம் சாதத்தில் கலந்து சாப்பிட்டு விடலாம். அந்த அளவிற்கு சுவையாகவும், அதேசமயம் பல நாட்கள் உபயோகப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இந்த தொக்கு திகழ்கிறது. இதை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 7 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 காஷ்மீரி மிளகாய் – 4 சீரகம் – ஒரு டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் வெள்ளை எள் -1

ஒரு நிமிட சட்னி செய்முறை | oru nimida chutney seimurai in tamil

படம்
[ad_1] - Advertisement - நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் கண்டிப்பான முறையில் தினமும் ஏதாவது ஒரு நேரமாவது டிபன் வகைகள் என்பதை நாம் கண்டிப்பாக செய்வோம். அது இட்லியாகவும் இருக்கலாம், தோசையாகவும் இருக்கலாம், சப்பாத்தியாவும் இருக்கலாம். அப்படி நாம் செய்யும்பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்கு என்று தனியாக சட்னி செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பலரும் வீட்டில் செய்த குழம்புகளை ஊற்றி சாப்பிட விரும்ப மாட்டார்கள். சட்னி இருந்தால் இரண்டு தோசை அதிகமாக செல்லும் என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அவசர அவசர அவசரமான நேரத்தில் ஒரு நிமிடத்தில் சட்னி செய்து கொடுத்து விடலாம். அப்படி செய்து கொடுப்பதால் நமக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் உண்டாகும். அதுதான் சட்னி காலியாவதோடு மட்டுமல்லாமல் தோசையும் சேர்ந்து காலியாக இன்னும் வேண்டுமென்று கேட்கும் சூழ்நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். அந்த அளவிற்கு சட்னியின் சுவை அற்புதமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு சட்னியை பற்றி நான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் வெங்காயம் – 2பச்சை மிளகாய் -4

காராபூந்தி குருமா செய்முறை | Kaara boonthi kuruma recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக நம்முடைய உணவு வகைகளில் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு பெரிய பங்கு இருக்கிறது. தினமும் இவற்றில் ஏதாவது ஒன்றை நம்முடைய உணவில் நாம் சேர்த்துக் கொண்டு தான் வருகிறோம். அப்படி ஏதாவது ஒன்றை செய்யும்பொழுது அதற்கு தொட்டுக் கொள்வதற்காக ஏதாவது ஒரு சட்னி வகையையோ அல்லது குருமா வகை செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். சட்னியாக இருந்தாலும் குருமாவாக இருந்தாலும் எப்பொழுதும் ஒரே மாதிரி செய்தோம் என்றால் அது போர் அடித்து விடும். செய்கின்ற நமக்கு ஒரு வித வெறுப்பு ஏற்பட்டுவிடும். அதை தவிர்த்து எளிமையான முறையில் சற்று வித்தியாசமாக அதே சமயம் சுவையில் அற்புதமாக இருக்கக்கூடிய ஏதாவது ஒன்றை நடுவில் மாற்றி மாற்றி செய்தால்தான் சமைக்கிற நமக்கும் திருப்தியாக இருக்கும், சாப்பிடுபவர்களுக்கும் விருப்பமாக இருக்கும். அப்படி அருமையான சுவையில் வித்தியாசமாக செய்யக்கூடிய காராபூந்தி குருமாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - தேவையான பொருட்கள் காராபூந்தி – 150 கிராம் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு உளுந்து – ஒரு டீஸ்பூன

கொள்ளு துவையல் செய்யும் முறை | Kollu thuvaiyal recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய நன்மைகளை தரக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருக்கும். நோய்கள் நீங்குவதற்கு எந்த அளவிற்கு இயற்கையான காய்கறிகள் உதவுகிறதோ அதே போல் தான் நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் மாற்றுவதற்கு சில பொருட்கள் உதவி செய்கின்றன. அந்த பொருட்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது கொள்ளு. இது பொதுவாக குதிரைகளுக்கு உணவாக கருதப்படுகிறது. குதிரைகள் எவ்வளவு தூரம் ஓதினாலும் களைப்பே தெரியாமல் இருப்பதற்கு காரணம் குதிரைகள் கொள்ளை சாப்பிடுவது தான். அந்த கொள்ளை நாமும் சாப்பிடும் பொழுது நமக்கும் எந்தவித உடல் சோர்வும் ஏற்படாமல் ஆரோக்கியமாக நம்மால் வாழ முடியும். மேலும் இந்த கொள்ளில் அதிக அளவு புரோட்டின்னும் நார்ச்சத்தும் இருக்கிறது. இதை உடல் எடை குறைக்க விரும்புவோர் அதிக அளவில் உண்ணா ஆரம்பிப்பார்கள். இருப்பினும் இது உடல் உஷ்ணத்தை அதிகரிக்க கூடியது என்பதால் அதை மட்டும் கருத்தில் வைத்துக் கொண்டு மழை, குளிர் காலங்களில் சாப்பிட வேண்டும். அப்படிப்பட்ட கொள்ளை எப்படி சாப்பிட்டால் ருசியாக இருக்

கற்கண்டு சாதம் செய்முறை | Karkandu sadam recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - மிகவும் தெய்வீக மாதமாக திகழக்கூடிய மாதம் தான் ஆடி மாதம். அதிலும் குறிப்பாக அம்மன் வழிபாடு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அம்மனை வழிபடும் பொழுது அம்மனுக்கு பிடித்த மாதிரி இருக்கக்கூடிய பொருட்களை வைத்து வழிபாடு செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் ஆடி மாதம் செய்யக்கூடிய பிரசாதத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம். ஆடி மாதத்தில் எப்படி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு விசேஷமும் அதேபோல் ஆடி பௌர்ணமியும் விசேஷம்தான். அப்படிப்பட்ட ஆடி பௌர்ணமி அன்று மகாலட்சுமி தாயாரின் அருளை பெற்று செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாருக்கு கற்கண்டு பொங்கலை நெய்வேத்தியமாக படைத்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. அந்த நெய்வேத்தியத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். - Advertisement - தேவையான பொருட்கள் பச்சரிசி – ஒரு கப் கற்கண்டு – ஒரு கப் பால் – ஒரு கப் தண்ணீர் – 2 கப் குங்குமப்பூ – ஒரு சிட்டிகை உப்பு – ஒரு சிட்டிகை நெய் – 3 டேபிள் ஸ்பூன் முந்திரி – 10 திராட்சை