Kaduveli Siddhar - Nandhavanathil Oru Aandi
[ad_1]
Kaduveli Siddhar Details in Tamil கடுவெளிச் சித்தர் 🛕 கடுவெளிச் சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார். கடுவெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை. அவர் பாடிய பாடல் இது: நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி நல்ல வழிதனை நாடு- எந்தநாளும் பரமனை நத்தியே தேடுவல்லவர் கூட்டத்திற் கூடு – அந்தவள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு 🛕 மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். நந்தவனம் = உலகுஆண்டி= ஆன்மாநால் ஆறு மாதம்= 4+6 பத்து மாதங்கள் தாயின் வயிற்றிலிருந்த கருவறைகுயவன் = இறைவன் தோண்டி= மனிதப் பிறவி 🛕 மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்...