இடுகைகள்

guru manthiram in tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குரு பகவானின் அருளை பெற கூற வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - அனைத்து தேவர்களுக்கும் குருவாக திகழக்கூடியவர்தான் குருபகவான். அப்படிப்பட்ட குருபகவான் பார்க்கும் பார்வையிலேயே பல நன்மைகள் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அவர் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் அவ்வளவு சிறப்புக்குரியதாக திகழ்கிறது. மேலும் பெருமளவு பணத்திற்கு அதிபதியாக திகழக் கூடியவரும் குரு பகவான் தான். செல்வ செழிப்பு உயர வேண்டும் என்றாலும் அதற்கும் குரு பகவானின் அருள் வேண்டும். இதோடு மட்டுமா சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் அது குருபகவானின் அருள் இல்லாமல் நடைபெறாது என்று தான் கூற வேண்டும். திருமணம் செய்ய போறவர்கள் முதலில் குரு எங்கு இருக்கிறார் என்பதை தான் பார்ப்பார்கள். - Advertisement - குழந்தை பாக்கியம் இல்லை என்பவர்கள் குருவால் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை தான் முதலில் பார்ப்பார்கள். இப்படி பல விஷயங்களுக்கு குரு காரண கர்த்தாவாக திகழ்கிறார். அப்படிப்பட்ட குருவின் அருளை பெறுவதற்கு சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.