15th Century Kalvettu Found near Ramanathapuram in Tamil
[ad_1]
15th Century Kalvettu Found near Ramanathapuram in Tamil இறைவன் மங்களநாதராகவும் இறைவியார் மங்களேசுவரியாகவும் எழுந்தருளியுள்ளது இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை என்னும் திருக்கோவில். இத்திருக்கோவிலில் இறைவன் இறைவியாருக்கு வேத ஆகமங்களின் ரகசியத்தை உபதேசித்தமையால் இத்திருத்தலத்திற்கு உத்திரகோசமங்கை என்றப் பெயர் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திருக்கோவிலில் மாணிக்கவாசகர், வேதவியாசர், காகபுஜ முனிவர் வாணாசுரன் ஆகியோர் இறைவன், இறைவியை வணங்கி வழிபட்டுள்ளதாக இக்கோவிலின் தலபுராணம் கூறுகிறது. இத்திருத்தலத்தின் தலமரம் இலந்தை மரமாகும். மேலும் இத்திருத்தலத்தின் உள்ளே அக்கினி தீர்த்தமும், மங்கள தீர்த்தமும் உள்ளன. இத்திருத்தலத்திற்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், மொய்யார்தடம் பொய்கை தீர்த்தமும், வியாச தீர்த்தமும், சீதள தீர்த்தமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்தீர்த்தங்களில் குறிப்பாக வியாச தீர்த்தம் இருக்கும் இடத்தைக் குறிப்பிடுவதும் 87 செ.மீ. உயரம், 45 செ.மீ அகலம் 14 செ.மீ. கனம் ஆகிய அளவுகளுடையதும், ஒரு கல்தூணில் 6 வரிகள் கொண்ட 15-ஆம் நூற்றாண்டை...