இடுகைகள்

நஙக லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருக மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மையான வார்த்தைகள் என்று நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். நோயால் கஷ்டப்படுபவர்களால் எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாது. எவ்வளவு பணம் இருந்தாலும் நகை இருந்தாலும் சொத்து இருந்தாலும் அவை அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம்முடைய உடல் ஆரோக்கியமாகவும் திடகாத்திரமாகவும் இருக்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் பலரது வாழ்க்கையில் நோயினால் கஷ்டப்படுவதோடு மட்டுமல்லாமல் அந்த நோய்க்காக செலவு செய்யும் தொகையும் அதிகமாக போகும். அப்படிப்பட்ட நோயால் ஏற்படக்கூடிய செலவுகளை குறைக்கவும் நோய் படிப்படியாக குறையவும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருக மந்திரம் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கிறது. இன்றைய காலத்தில் பலரும் வணங்கக்கூடிய ஆபத் பாண்டவனாக திகழக்கூடியவர் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை ஆபத்து பாண்டவன் என்று கூறுவதோடு மட்டும

வேர்க்குரு நீங்க டிப்ஸ் | Verkuru neenga tips in tamil

படம்
[ad_1] - Advertisement - வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. இதனால் அதிக அளவில் வேர்வை ஏற்படும். அதே சமயம் வேர்க்குருவும் ஏற்படும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பிரச்சனை வரத்தான் செய்யும். வேர்க்குருவால் அரிப்பு ஏற்படும். இதை நாம் சொரிய சொரிய வேர்க்குரு அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படிப்பட்ட வேர்க்குருவை எப்படி எளிய முறையில் சரி செய்வது என்று தான் இந்த ஆரோக்கியம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம். உடல் வெப்பமாவதை தவிர்ப்பதற்காக மட்டுமே தான் வியர்வை ஏற்படுகிறது. பொதுவாக நம்முடைய உடல் சூடு அதிகரிக்கும் பொழுது வேர்வை துளிகள் உற்பத்தியாகி உடலை குளிர்ச்சி அடைய செய்யும். ஆனால் இந்த வெயில் காலத்தில் வெளிப்புறத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பமான சூழ்நிலை உருவாகும். அப்பொழுது இன்னும் அதிகமாக வியர்வை ஏற்படும். - Advertisement - இப்படி ஏற்படக்கூடிய வியர்வை சரியாக நம்முடைய சருமத்திலிருந்து வெளியில் வராமல் அந்த சரும துளைகளில் ஏதேனும் அடைப்பு இருந்தால்தான் இது வியர்வை கொப்பளம் ஆக வரும். அதாவது

வறுமை நிலை நீங்கி செல்வம் உயர கூற வேண்டிய மந்திரம்

படம்
[ad_1] - Advertisement - வறுமை என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்து விட்டால் நம்மிடம் இருந்து பல விஷயங்கள் காணாமல் போய்விடும். சந்தோஷம், நிம்மதி, மகிழ்ச்சி, மரியாதை என்று கூறிக் கொண்டே செல்லலாம். இந்த வறுமை நிலை வந்து விட்டால் நம்முடன் சேர்ந்து வரக்கூடியது கஷ்டம், கடன், வருத்தம், துன்பம் போன்றவை. இவை அனைத்தும் வந்துவிட்டால் நம்முடைய வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்கும். அதனால் முடிந்த அளவிற்கு வறுமை நிலை வராத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும். பண வரவை அதிகரிக்கவும் வறுமை நிலையை மாறவும் சொல்லக்கூடிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். வறுமை நிலை நீங்கி செல்வம் உயர மந்திரத்திற்கு பல சக்திகள் இருக்கிறது. எந்த மொழியில் மந்திரத்தை கூறினாலும் முழுமனதோடு கூற வேண்டும். எந்த நேரத்தில் கூறுகிறோம் என்பதும் முக்கியமே. எந்த தெய்வத்தை பற்றின மந்திரத்தை கூறுகிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. எந்த தெய்வத்தையும் நினைக்காமல் “ஓம்” எனும் பிரணவ மந்திரத்தை முழுமனதோடு உச்சரித்தாலும் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும். - Advertisement - அப்படி இரு

கஷ்டங்கள் நீங்க முருகன் மந்திரம் | kastangal neega murugan manthiram in tamil

படம்
[ad_1] - Advertisement - ஒருவருடைய வாழ்க்கையில் பல கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களை சமாளித்து வெளியில் வருவது தான் வாழ்க்கை என்று கூட கூறலாம். அப்படிப்பட்ட கஷ்டங்களிலிருந்து வெளியே வருவதற்கு முயற்சிகளை செய்தும் வெளியில் வர முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் முருகப்பெருமானின் அருளை பெற வேண்டும். முருகப்பெருமானின் அருளை பெற்று யார் ஒருவர் தன்னுடைய கஷ்டங்களிலிருந்து விடுபட முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும் என்று கூறப்படுகிறது. அப்படி கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கு முருகப்பெருமானின் மந்திரத்தை எந்த முறையில் உச்சரிக்க வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். முருகன் மந்திரம் தேவர்களின் கஷ்டங்களை போக்குவதற்காக அவதரித்தவர் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை நாம் வழிபடும் பொழுது நம்முடைய கஷ்டங்களும் நீங்கும் என்றுதான் கூற வேண்டும். அவரை முழுமனதோடு சரணாகதி அடைந்து அவரின் மந்திரங்களை உச்சரித்தாலேயே நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு வேலும் மயிலும் ஓடோடி வந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ம

பணக்கஷ்டம் நீங்க மந்திரம் | Pana kastam neenga manthiram

படம்
[ad_1] - Advertisement - பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நம்மால் எதையுமே பெற முடியாது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக பலரும் அல்லும் பகலும் பாடுபட்டு உழைக்கிறார்கள். அப்படி பாடுபட்டு உழைத்தாலும் பலருக்கும் தங்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காத நிலையே இருக்கிறது. ஏமாற்றுபவர்களுக்கு அதிக அளவில் பண வரவு ஏற்படுகிறது, நியாயமாக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பணவரவு ஏற்படுவது இல்லை என்று பலரும் புலம்பி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படி உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத சூழ்நிலையில் நமக்கு பணக்கஷ்டம் ஏற்படும். எந்த வகையில் பணக்கஷ்டம் ஏற்பட்டாலும் அந்த பணக்கஷ்டத்தை நியாயமான முறையில் தீர்ப்பதற்கு சொல்லக் கூடிய ஒரு எளிமையான மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். - Advertisement - கஷ்டப்பட்டு உழைத்து அந்த உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத சூழ்நிலையில் ஒருவருக்கு எந்த அளவுக்கு மனவருத்தம் ஏற்படுமோ அதே அளவிற்கு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை விட அதிக அளவு செலவுகள் ஏற்படும் பொழுதும் ஏற்படும். வரவை விட செலவு அதிகமாக இருக்