சப்த விடங்க ஸ்தலங்கள்: Saptha Vidanga Sthalangal
[ad_1]
சப்த விடங்க தலங்கள் Saptha Vidanga Sthalangal சப்தம் என்றால் ஏழு (7) என்று பொருள், டங்க என்றால் உளி, ‘வி‘ என்றால் “செதுக்கப்படாத” என்று பொருள். உளியால் செதுக்கப்படாத சுயம்பு மூர்த்தியாக உருவாகிய “விடங்கர்” என்று அழைக்கப்படும் சிவபெருமான் ஏழு கோவில்களில் பூஜிக்கப்படுகிறார். இந்த கோவில்கள் திருவாரூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் உள்ளன. புராணங்களில் கூற்றின்படி இவை உருவான வரலாறு இந்த சப்தவிடங்கள் சோழ நாட்டை ஆண்ட முசுகுந்த சக்ரவர்த்தியால் உருவாக்கப்பட்டது. ‘முசுகுந்த’ என்றால் குரங்கு முகத்தை உடையவன் எனப் பொருள். ஒருமுறை கைலாயத்தில் சிவனும் பார்வதியும் ஓர் மரத்தின் கீழ் இளைப்பாறும்போது வில்வ மரத்தின் மேலிருந்து ஒரு குரங்கு வில்வ இலைகளை பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தது. இதைக்கண்டு கோவமுற்ற பார்வதி குரங்கினை சபிக்க முற்பட்டபோது சிவபெருமான் பார்வதியை சாந்தப்படுத்தி, சிவராத்திரியில் தங்களை வில்வ இலைகளால் அர்சித்த குரங்கினை அழைத்து, பூலோகத்தில் பிறந்து பெரிய அரசனாக, வரம் கொடுத்தார். ஆனால் அந்த குரங்கோ சிவனடியில் வாழ ஆசை கொண்டது. ஆனால் சிவபெருமான்...