வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட | vazhkaiyil nala munnetram arpada vallipadu in tamil
[ad_1]
- Advertisement - அம்பாளுக்கு உரிய தினமாக கருதப்படுவது நவராத்திரி. அதேபோல் சிவபெருமானுக்குரிய தினமாக கருதப்படுவது சிவராத்திரி. வருடத்திற்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை நாம் மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். அதை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் மாத சிவராத்திரி என்று வரும். அன்றைய நாளில் நாம் சிவபெருமானை வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் இந்த ஒரு மந்திரத்தை கூறுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட ஒருவருடைய வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், துன்பங்கள் வந்தாலும், துயரங்கள் வந்தாலும் அவை அனைத்தையும் சமாளித்து அடுத்த கட்ட முன்னேற்ற நிலைக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாத பட்சத்தில் அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையின் மேலே ஒருவித விரக்தி ஏற்படும். இந்த விரக்தியை போக்கி வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றத்தை பெறுவதற்கு தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். நம்முடைய முயற்சிகளோடு தெய்வத்தின் அருளும் நமக்கு...