Saraswathi Anthathi Lyrics in Tamil
[ad_1]
Saraswathi Anthathi in Tamil இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் சரசுவதி அந்தாதியும் ஒன்றாகும். கம்பர் சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப் மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர் சடையப்பவள்ளல். கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதி Saraswathi Anthathi Lyrics in Tamil கடவுள் வாழ்த்து ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்ஏய வுணர்விக்கு மென்னம்மை – தூயவுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளேயிருப்பளிங்கு வாரா திடர். படிக நிறமும் பவளச் செவ்வாயும்கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்கல்லுஞ்சொல் லாதோ கவி. நூல்: கலித்துறை சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 1 வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனேபிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும...