ஸ்ரீ போசல பாவா (விஷ்ணு தாசர்கள்): Vishnu Bhagavata Posala Bhava
[ad_1]
Vishnu Bhagavata Posala Bhava History in Tamil ஸ்ரீ போசல பாவா பண்டரிபுரத்தின் அருகேயுள்ள செல்வம் கொழிக்கும் சிற்றூர் பாலகாடு என்பது. அவ்வூரிலே பல பிரிவினர் வாழ்ந்தாலும், வேளாளர்களே மிகுந்த செல்வம் படைத்திருந்தனர். அந்த வேளாளர்க்குள்ளேயும் மிகுந்த செல்வம் படைத்தவர் போசல பாவா. இவரது மனைவி மமதா பாய் மிகவும் நல்லவள். இவர்களுக்கு ஏமாஜி என்ற ஒரே மகன். அவனும் தாய்தந்தையரைப்போல சிறந்த நற்பண்புகள் பெற்றவன். இந்தச் சமயத்திலே, நாட்டிலே கடும் பஞ்சம் தோன்றியது. போசல பாவாவின் நிலத்திலும் விளைச்சல் இல்லை. மாதந்தோறும் ஏகாதசியில் விரதம் இருந்து, துவாதசியிலே பலருக்கு அன்னதானம் செய்து வருவது வழக்கம். தசமியன்றே புறப்பட்டு பண்டரிபுரம் சென்று அன்றும் மறுநாளும் தங்கி, துவதாசியிலே அன்னதானம் செய்வார். இந்தக் கடும் பஞ்சத்திலும் பிடிவாதமாக இப்பணியினை நிறைவேற்றி வந்தார் போசலபாவா. வறுமை வந்து விட்டதே என்று கடமையை விட முடியுமா? என் அப்பன் பண்டரிநாதனைப்பாராமல் இருக்கவும் முடியுமா? போகத்தான் வேண்டும் என்று நினைத்தார் அவர். தந்தையும் மகனுமாய்ப்போய் காட்டிலே விறகு வெட்டி கொணர்ந்து விற்...