இடுகைகள்

பணட லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐந்து நிமிடத்தில் பூண்டு சட்னி செய்முறை

படம்
[ad_1] - Advertisement - பொதுவாக காலை நேரத்தில் அவசர அவசரமாக வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் பள்ளிக்கூடத்திற்கு செல்பவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு காலை மதிய உணவுகளை தயார் செய்து தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குடும்பத் தலைவிகளாக இருந்தாலும் வேலைக்கு செல்லும் பெண்மணிகளாக இருந்தாலும் அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே இருப்பார்கள். இப்படி செய்யும் பொழுது காலை நேர டிபனுக்கு தொட்டுக் கொள்வதற்கு எதுவும் செய்ய முடியாமல் பலரும் கஷ்டப்படுவார்கள். இதனால் வீட்டில் சண்டை கூட ஏற்படலாம். ஏன் இன்னும் சில வீட்டில் குழந்தைகளும், பெரியவர்களும் ஒழுங்காக சாப்பிடாமல் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகவும் எளிமையாக ஐந்தே நிமிடத்தில் ஒரு சட்னியை தயார் செய்யலாம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த சட்னி உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய சட்னியாகவும் அதே சமயம் எளிதில் செய்யக்கூடிய சட்னியாகவும் திகழ்கிறது. இந்த சட்னியை பெரும்பாலும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிக அளவில் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பூண்டு சட்னியை எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித

வேர்க்கடலை பூண்டு பொடி சாதம் செய்முறை

படம்
[ad_1] - Advertisement - நம்முடைய பாரம்பரிய உணவுகளை நாம் செய்வதற்கு சிறிது சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது என்பதற்காகவே அதை எளிமையாக செய்து முடிக்கும் வகையிலும் அதே சமயம் ஆரோக்கியம் மிகுந்ததாகவும் இருப்பதற்காக அதை நாம் பொடி வகையில் தயார் செய்து வைத்துக் கொள்கிறோம். இப்படி கருவேப்பிலை பொடி, பிரண்டை பொடி, பூண்டு பொடி, வேர்க்கடலை பொடி என்று பல பொடிகள் இருக்கின்றன. அந்த பொடிகளில் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் வேர்கடலை பூண்டு பொடி எப்படி செய்வது என்றுதான் பார்க்கப் போகிறோம். இந்த வேர்க்கடலை பூண்டு பொடி என்பது ஆந்திராவில் மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. இதை ஒருமுறை தயார் செய்து வைத்துக் கொண்டோம் என்றால் நமக்கு இட்லி, தோசை போன்ற டிபன் ஐட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம் சாப்பாட்டிற்கும் போட்டு சாப்பிடலாம். இதை குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் தயார் செய்து அனுப்பலாம். குழம்பு செய்ய நேரமில்லை என்னும் பட்சத்தில் இந்த பொடி நமக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். - Advertisement - தேவையான பொருட்கள் கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் வேர்கடலை – 150 கி

முள்ளங்கி போண்டா செய்முறை | Mullangi bonda recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - பல அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட முள்ளங்கியை நாம் நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் பலருக்கும் இந்த முள்ளங்கியின் வாடை என்பது துளி கூட பிடிக்காது. அதனால் அந்த முள்ளங்கியை சாப்பிடாமலேயே ஒதுக்கி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் முள்ளங்கி இருப்பதே தெரியாத அளவிற்கு செய்யக்கூடிய ஒரு முள்ளங்கி போண்டாவை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன. இது நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் உதவக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. மேலும் முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். புற்றுநோயை தடுப்பதற்கு உதவக்கூடியதாகவும் திகழ்கிறது. முள்ளங்கியில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் உடலுக்கு தேவையான அளவு நீர்ச்சத்தை தருவதோடு நம்மை சுறுசுறுப்பாகவும் செயலாற்ற உதவுகிறது. இது வயிறு மற்றும் கல்லீரலில் ஆரோக்கியத்தை பராமரிக்கக் கூடிய ஒன்றா

பூண்டு சாதம் செய்முறை | Garlic rice recipe in tamil

படம்
[ad_1] - Advertisement - உணவே மருந்து என்னும் அடிப்படையில் பல மருத்துவ குணம் கொண்ட பொருட்களை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும். அப்படி ஆரோக்கியமாக வாழ்வதற்கு முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் பூண்டு. இந்த பூண்டை நாம் பூண்டு குழம்பாக வைத்துக் கொடுத்தாலும் சரி, வேறு எதிலாவது சேர்த்து கொடுத்தாலும் சரி அதன் வாடைக்கு பலரும் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் பூண்டு சாதம் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். பூண்டை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை சமசீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதோடு மட்டுமல்லாமல் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது. புற்றுநோயின் ஆபத்தை குறைக்கிறது. உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. பூண்டை அதிக அளவில் சேர்ப்பதன் மூலம் உடலில் ஏற்படக்கூடிய வீக்கம், கீழ் வாதம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அத